இந்த பெயர எங்கையோ படிச்சி இருக்கோம்னு தோனுதா?
நியாபகம் வந்திச்சா? இல்லையா அப்போம் படிங்க....
குற்றாலீசுவரன் (பிறப்பு: 8 நவம்பர், 1981) என்னும் குற்றால் இரமேசு இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர்.
தன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.
1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.
இவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.
ஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது. இப்போம் நியாபகம் வருதா எங்க படிச்சோம்ன்னு???
சாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
மறக்காதிங்க சாதனை செய்தவரை......
நியாபகம் வந்திச்சா? இல்லையா அப்போம் படிங்க....
குற்றாலீசுவரன் (பிறப்பு: 8 நவம்பர், 1981) என்னும் குற்றால் இரமேசு இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர்.
தன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.
1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.
இவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.
ஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது. இப்போம் நியாபகம் வருதா எங்க படிச்சோம்ன்னு???
சாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
மறக்காதிங்க சாதனை செய்தவரை......
No comments:
Post a Comment