Sunday, October 20, 2013

சந்தன கடத்தல் வீர்ப்பன் veerappan

காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன்

இந்­திய தமிழ் நாடும் கர்­நா­டக எல்­லை­யு­மான ஒரு அடர்ந்த காட்­டுப்­ப­கு­திக்கு மத்­தியில் ஓர­மாக அமைந்த ஒரு கிரா­மம்தான் கோபி­நந்தம். அந்தக் கிரா­மத்தில் வசித்த முனு­சாமிக் கவுண்டர் மற்றும் புலித்­தா­யம்மா ஆகி­யோ­ருக்கு 1952ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 18ஆம் திகதி பிறக்­கிறான் ஒரு மகன். அவன் தான் சந்­த­ன­மரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்­க­டத்தல்... என தன் ஒவ்­வொரு அசை­விலும் காட்­டுக்­குள்­ளி­ருந்தே நாட்டை அதி­ர­வைத்­தவன்.சின்­னஞ்­சிறு ஆள்­படை வைத்­துக்­கொண்டு வன­துறை அதி­கா­ரி­யி­லி­ருந்து நாட்டின் பல பிர­ப­லங்கள் வரை கன கச்­சி­த­மாகக் கடத்­திக்­கொண்டு போய் காட்­டுக்குள் வைத்துக்­கொண்டு இரண்டு அர­சு­க­ளையே மிரட்டி வனத்­திற்குள் தனி ராஜாங்கம் நடத்தி வந்­தவன்.இத்­தனை நாச வேலை­க­ளையும் அஞ்­சாமல் செய்­து­வந்த அந்த மனி­த­னுக்குள் ஒரு ஓரத்தில் மொழிப் பற்றும் இருக்­கத்தான் செய்­தது. இரக்­க­மில்­லாத அந்த மிரு­கத்­துக்­குள்ளும் மனைவி, குழந்தை என குடும்­பப்­பா­சமும் அதி­க­மா­கவே இருந்­தி­ருக்­கின்­றது.அவன் தான்... கூசி­மு­னு­சாமி வீரப்­பக்க கவுண்டர் என்ற இயற்­பெ­யரைக் கொண்டு பின்­னால் சந்­தனக் கடத்தல் என்ற அடை­மொ­ழியை தன் பெய­ருக்கு முன்னால் வர­வ­ழைத்துக் கொண்ட சந்­தனக் கடத்தல் வீரப்பன்.அந்த ஊர் மக்கள் அவனை மோலக்கண் என்றும் ஒரு சிலர் வீரப்பன் என்றும் அழைத்­தனர்.ஆனால் நமக்­கெல்லாம் அறி­மு­க­மான பெயர் வீரப்பன்...அவன் பெய­ரி­லேயே வீரம் இருந்­த­தாலோ என்­னவோ தன் உயிரை இழக்கும் வரை அவனும் வீர­னா­கவே திகழ்ந்தான்.வீரப்­பனின் வாழ்க்கை என்­பது தமிழ் நாட்டு வர­லாற்றில் ஒரு இரத்த அத்­தி­யா­ய­மா­கவே பதி­வு­செய்­யப்­பட்­டி­ருக்கும். காரணம் கிட்­டத்­தட்ட இரு­பது வரு­டங்கள் வரை அனைத்து ஊட­கங்­க­ளிலும் பர­ப­ரப்­பாக பவ­னி­வந்­தவன் இவன். தமிழ்­நாடு கர்­நா­டகம் என மிகப்­பெ­ரிய மாநில அர­சு­களின் பொலி­ஸா­ருக்கு அவன் காலடித் தடம்­கூட தெரி­யாமல் பார்த்­துக்­கொண்­டவன். ஒன்­றல்ல இரண்­டல்ல வீரப்­பனை பிடிக்க .பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் தகர்த்­தெ­றிந்து தனிக்­காட்டு ராஜா நான்தான் என்­பதை நிரூ­பித்து சிம்ம சொப்­ப­ன­மாகத் திகழ்ந்­தவன் சந்­தனக் கடத்தல் விரப்பன்.வீரப்பன் பிறந்த கோபிந்தம் எனும் கிராமம் மிகவும் பின்­தங்­கிய ஒரு பிர­தேசம். பள்­ளிக்­கூடம் என்ற ஒரு வார்த்­தையைக் கேட்க கூட கொடுப்­பனை இல்­லா­த­வர்­கள்தான் இந்த ஊர் மக்கள். அங்கு மழைக்குக் கூட சற்று ஒதுங்­கி­விட்டுச் செல்ல ஒரு பள்­ளிக்­கூடம் இல்­லாத ஊர் அது. ஏன் அதை அண்­டிய கிரா­மங்­களில் பள்­ளிக்­கூடம் இருக்­குமே? என்­றாலும் கூட அங்­கேயும் இதே நிலைதான். இப்­ப­டி­யி­ருக்கும் கிரா­மத்தில் ஒருவன் எப்­படி படிப்­ப­றிவைக் கொண்­டி­ருப்பான். அப்­ப­டி­யேதான் வீரப்­பனும் படிப்பின் வாச­னையே என்­னென்று அறி­யா­தவன் அவன்.வீரப்பன் சிறு­வ­னாக இருந்­த­போது அவன் செய்த வேலை மாடு மேய்ப்­பது. அதை அவன் விரும்பிச் செய்தான். அந்­நே­ரங்­களில் வீரப்­பனின் உச்­சக்­கட்ட மகிழ்ச்­சியே மந்­தை­யி­லுள்ள மாடு ஒன்றின் மீது ஏறி உட்­கார்ந்­து­கொண்டு ஏனைய மாடு­களை மேய்ப்­ப­துதான்.இப்­படி மாடு மேய்த்து மகிழ்ச்­சி­ய­டைந்த விரப்பன் இறு­தியில் மாபெரும் பயங்­க­ர­மான மனி­த­னாக மாறி­யது எப்­படி?இப்­படி மாடு­களை மேய்த்தும் சிறு சிறு குறும்­பு­களில் தன் பொழுதைக் கழித்­து­வந்த வீரப்­ப­னுக்கு ரோல் மாட­லாக விளங்­கு­கிறார் ஒருவர். அவர் பெயர் சால்வை கவுண்டர். இவர் செய்­து­வந்த வேலை என்ன தெரி­யுமா?இவர் ஒரு காட்டு கடத்தல் காரர். இவரும் கிட்­டத்­தட்ட இரு­பத்­தைந்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக காட்டுப் பகு­தியில் கடத்தல் தொழிலைச் செய்­து­வந்தார்.அவ­ரிடம் வேலைக்குச் சேர்ந்தான் வீரப்பன்.மாடு மேய்த்­துக்­கொண்­டி­ருந்த ஒரு சிறுவன் பின்­னாளில் பயங்­க­ர­மான ஒரு­வ­னாக மாறு­வ­தற்கு அடிகோலியது சால்வைக் கவுண்­ட­ருடன் வீரப்பன் கொண்­டி­ருந்த சிநே­கம்தான். மாடு ஒன்றின் மீது உட்­கார்ந்து­கொண்டு மாடு­களை மேய்ப்­பதை விட கடத்தல் தொழில் நடத்­து­வது மிகவும் சிர­மமானது என்­பது விரப்­ப­னுக்குத் தெரி­யாமல் இருந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.இருந்தும் கடத்தல் தொழிலை செய்ய விரும்­பு­கிறான் என்றால் அதில் வரும் பணம் மாடு மேய்ப்­பதால் வராது என்­பதை உணர்ந்­தி­ருக்­கிறான்.சந்­தனக்கடத்தல் வீரப்­பனைப் பற்றிப் பேசும்­போது நாம் சந்­த­ன­ம­ரத்தைப் பற்­றியும் கொஞ்சம் பேசத்­தானே வேண்டும்...சந்­த­ன­மரம் பண்­டைய இந்­தி­யாவில் மிக்க மதிப்­பு­டைய ஒரு பொருள். கர்­னா­டகா, கேரளா, தமி­ழகம் ஆகிய வன­ப­கு­தி­களில் மட்­டுமே விளை­வது இந்த சந்­தன மரங்கள். திப்பு சுல்தான் காலத்தில் போர்­க­ளுக்கு நிதி வேண்டும் என்ற நோக்கில் சந்­த­ன­மர வளர்ப்பை தேசிய மய­மாக்­கினார். 1792இல் போடப்­பட்ட இந்த சட்டம் அதன்­பின்னர் வந்த கர்­னா­டகம், மெட்ராஸ் ராஜ்­ஜியம் அர­சு­களால் தொடர்ந்து பின்­பற்­ற­பட்டு இந்­தியா சுதந்­திரம் வாங்கி திப்­பு­சுல்தான் ஆண்ட பகு­திகள் மூன்று மாநி­லங்­க­ளாகி பிரிந்த பின்­னரும் சட்­ட­புத்­த­கத்­தி­லேயே இருந்து வந்­தது.இந்த சட்­டப்­படி சந்­தன மரம் முழுக்க அர­சுக்கே சொந்தம். யார் வீட்டில் சந்­தன மரம் வளர்த்­தாலும் அதை வெட்­டினால் அது அர­சுக்கே சொந்தம். இதனால் சந்­த­ன­ம­ரத்தை தனியார் யாரும் வளர்ப்­ப­தில்லை.காட்டில் இயற்­கை­யாக விளையும் சந்­த­ன­ம­ரத்தை வெட்­டினால் அரசு வன இலாகா அதி­கா­ரிகள் பிடித்து தண்­டிப்­பார்கள். இப்­படி விதி­மு­றைகள் இருந்­ததால் வழக்கம் போல வன இலாகா அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்சம் கொடுத்து சந்­த­ன­மரம் வாங்கி விற்­பது அர­சிடம் கோட்டா முறையில் சந்­தன கட்­டை­களை வாங்கி விற்­பதை விட லாப­க­ர­மான தொழி­லா­னது. இப்­ப­டிப்­பட்ட பொரு­ளா­தார முறையில் உரு­வான கள்ள சந்­தையின் விளைவே வீரப்பன்.அவன் செய்­தது என்­னவோ காட்டில் இயற்­கை­யாக கிடைக்கும் மரத்தை வெட்­டி­யது. அது சட்­ட­ப்படி குற்றம் என்­றா­னதால் அவன் குற்­ற­வாளி ஆனான். அதன்பின் கொலைகள், கொள்ளை,கடத்தல் என அவன் போக்கு மாறி­யது...சரி இப்­போது சந்­த­னக்­க­டத்தல் வீரப்பன் கதைக்கு வருவோம்...சால்வைக் கவுண்­ட­ரோடு இணைந்து வீரப்பன் சந்­தன மரங்­களை வெட்டிக் கடத்தல் தொழில் செய்­து­வந்தான். அத்­தோடு யானை­களைக் கொன்று அதன் தந்­தங்­களை திருடி விற்­று­வந்தான். இந்த தொழிலில் நல்ல லாபம் வர தனக்­கென்று ஒரு கூட்­டத்தை அமைத்­துக்­கொண்டு காட்­டிற்குள் ஒரு ராஜாங்­கத்­தையே உரு­வாக்­கி­விட்டான் வீரப்பன்.இப்­ப­டி­யாக பல சட்­ட­வி­ரோதச் செயல்­களைச் செய்­து­வந்த வீரப்­பனை பிடிக்க வனத்­துறை அதி­கா­ரிகள் முயன்­ற­போது அவன் ஒவ்­வொ­ரு­வ­ராக கொலைசெய்தான். இப்­ப­டித்தான் அவ­னு­டைய கொலைப் படலம் ஆரம்­ப­மா­கியது.யானைத்­தந்தம், சந்­தன மரம் கடத்தல் தொழிலில் அதி­க­ளவு பணம் சம்­பா­தித்து வந்த வீரப்­பனின் அடுத்து முக்­கி­ய­மான குற்றச் செயல்தான் ஆட்­க­டத்தல் மற்றும் மிரட்டல், பிணைத் தொகை இவை. இந்தத் தொழிலில் முக்­கி­ய­மாகக் கடத்­தப்­பட்­ட­வர்கள் பலரும் கல் குவாரி தொழி­ல­தி­பர்கள்.ஒரு­வரைக் கடத்­தினான் என்றால் ஒரு கேசட் மட்டும் கடத்­தப்­பட்­ட­வரின் உற­வி­ன­ருக்கு வரும் அந்­தக கசட்டில் அவர் என்­னென்ன செய்ய வேண்டும் அதை எப்­படி செய்ய வேண்டும் என்று அனைத்தும் இருக்கும். அதன் படி செய்­து­விட்டால் கடத்­தப்­பட்­டவர் சிறு கீறல்­கூட இல்­லாமல் திரும்­பி­வி­டுவார்.வீரப்பன் சொன்­னது படி நடந்­து­கொள்­ளா­விட்டால் கடத்­தப்­பட்­ட­வரின் சடலம் கூட உற­வி­ன­ருக்குக் கிடைக்­காது.இப்­படிப் பல கடத்­தல்கள். இதில் முக்­கி­ய­மான கடத்­தல்தான் கன்­னட சூப்பர் ஸ்டார் என்று வர்­ணிக்­கப்­படும் கன்­னடத் திரைப்­பட நடிகர் ராஜ்­கு­மாரின் கடத்தல்.கிட்­டத்­தட்ட 72 வயதை எட்­டி­யி­ருந்த ராஜ்­குமார் தனது பண்ணை வீட்டில் இரவு நேர உணவை உண்­டபின் சற்று இளைப்­பா­றிக்­கொண்­டி­ருந்த சமயம். கன்­னடத் திரைப்­படத் துறையின் முக்­கி­ய­மான ஒரு தூண் என்றே சொல்­லலாம் ராஜ்­கு­மாரை. அவ­ரோடு சேர்த்து இன்னும் பலரும் இருக்­கி­றார்கள். பண்ணை வீட்டில் அனை­வரும் உறங்க இடம் போதாது என்­ப­தனால் பண்ணை வீட்­டிற்கு முன்­பாக உள்ள புதி­தாகக் கட்­டப்­பட்ட ஆடம்­பர மாளி­கையை நோக்­கி செல்­கின்­றனர் சிலர்.அப்­போது மணி சரி­யாக 9.30.ஐத் தொட்­டி­ருக்கும். பங்­க­ளாவை நோக்­கி நடந்த ராஜ­்கு­மா­ரோடு இருந்த நாகராஜ் என்­ப­வரின் சட்­டையை இறுக்­க­மாக ஒரு கை வந்து பிடித்து இழுக்­கி­றது.தடித்த கர­க­ரப்­பான ஒரு குரலில் இப்­படிச் சொல்­கி­றது... நான் வீரப்பன்!அடர்ந்த இருட்டு. அந்த இருட்டில் வீரப்­பனின் மீசை தனி­யாகத் தெரி­கின்­றது. வீரப்­ப­னோடு சேர்த்து கூட்­டா­ளிகள் பத்துப் பேர்.வீரப்பன் மீண்டும் பேசு­கிறான்... ராஜ்­குமார் எங்கே?அவர் பழைய வீட்டில் இருக்­கிறார்.தன்­னோடு வந்த கூட்­டா­ளி­களில் ஐந்து பேரைக் காவ­லுக்கு வைத்­து­விட்டு மீத­முள்ள கூட்­டா­ளி­களோடு பழைய வீட்டை நோக்கி செல்­கிறான் வீரப்பன்.வெளியில் நடப்­பவை எதையும் அறி­யாத ராஜ்­குமார் வீட்­டிற்குள் உட்­கார்ந்து தொலைக்­காட்­சியைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.திடு­தி­டு­வென உள்ளே நுழைந்த வீரப்பன், துப்­பாக்­கியை நீட்டி எங்கே ராஜ்­குமார் என்று அதே உரத்தக் குரலில் கேட்­கிறான். உடனே எழுந்­து­நின்­றவர் நான்தான் ராஜ்­குமார் என்­கி­றார்.உடனே வீரப்பன்...துப்­பாக்­கியை ராஜ்­கு­மாரின் பக்கம் நீட்டி நான் வீரப்பன், நீங்கள் என்­னோடு வர வேண்டும் என்று சொல்­லு­கிறான். உடனே ராஜ்­கு­மாரின் மனைவி திடு­திப்­பென்று எழுந்து உனக்கு என்ன வேண்டும் கேள் எவ்­வ­ளவு பணம் வேண்டும் சொல் தந்­து­வி­டு­கிறோம். அவரை விட்டு விடு என்று வீரப்­பனைப் பார்த்துச் சொல்­கிறார்.அப்­படிச் சொல்­லிக்­கொண்­டி­ருக்க வீரப்­பனின் கூட்­டாளி ஒருவன் ராஜ்­கு­மாரின் கைகளைக் கட்­டு­கிறான்.வீரப்பன் அதே தடித்த குரலில் சொல்­லு­கிறான்... யாரும் சத்தம் போடக் கூடாது. நான் இப்­போது அவரை அழைத்துச் செல்லப் போகிறேன். ஏன் எதற்கு என்று இப்­போது சொல்ல முடி­யாது...சார் எனக்கு வேண்டும்... அவ்­வ­ள­வுதான்.நான் அவ­ருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். நீங்கள் அஞ்சத் தேவை­யில்லை அவர் பத்­தி­ர­மாக என்­னோடு இருப்பார் என்று சொன்ன வீரப்பன். தன் கையி­லி­ருந்த ஒரு கசட்டை ராஜ்­கு­மாரின் மனை­வி­யிடம் கொடுத்து... இந்த கசட்டை கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்­லி­விட்டு புறப்­ப­டு­கிறான்...வெளியே வந்த வீரப்பன் ராஜ்­கு­மா­ரோடு இருந்­த­வர்­களில் மூவரைப் பார்த்து நீங்கள் மூவரும் ராஜ்­கு­மா­ருடன் வர வேண்­டு­மென வீரப்பன் சொல்­கிறான். அவர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு நடக்க ஆரம்­பிக்­கிறான்.நடந்­து­கொண்டு கொஞ்சம் சத்­த­மா­கவும் திமிற­ரான குரல் நயத்­து­டனும் சொல்­கிறான்...அம்­மா­விடம் ஒரு கசட் கொடுத்­தி­ருக்­கிறேன். அது உடனே கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரிடம் போய் சேர வேண்டும். இப்­படிச் சொல்­லிக்­கொண்டு நடந்து சென்ற வீரப்பன் இருட்டில் மறைந்­து­வி­டு­கிறான்.அப்­போ­தைய கர்­நா­டக முத­ல­மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. தமிழ்­நாட்டின் முத­லமைச்சர் மு.கரு­ணா­நிதி. இரு­வரும் ஒன்று கூடி பேசி­விட்டு. ராஜ்­கு­மாரை விடுவித்­துக்­கொள்ள தூது அனுப்ப முடி­வெ­டுக்­கி­றார்கள். தூது போவது நக்­கீரன் புல­னாய்வு சஞ்­சி­கையின் ஆசி­­ரியர் நக்­கீரன் கோபால்.அத்­தோடு நெடு­மா­றனும் அனுப்பி வைக்­கப்­ப­டு­கிறார். கிட்­டத்­தட்ட 109 நாட்கள் வரை வீரப்­ப­னிடம் பணயக் கைதி­யாக இருந்த ராஜ்­குமார் எந்த அசம்­பா­வி­தமும் நிக­ழாமல் விடு­தலை செய்­யப்­ப­டு­கிறார்.இந்தக் கடத்தல் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வையும் அதிர்ச்­சி­யடையச் செய்­தது.இப்­ப­டி­யாக வீரப்­பனின் அட்­டா­காசம் தாங்­காமல் இரு மாநில பொலிஸ்­களும் சேர்ந்து ஒரு பொலிஸ் குழுவை உரு­வாக்கி வீரப்­பனை பிடிக்க ஒரு திட்டம் தீட்­டு­கின்­றனர்.இந்தத் திட்­டத்தில் விஜ­யகுமார் தலை­மை­யேற்று நடத்­தி­மு­டிக்­கிறார். பல நாட்கள் காத்­தி­ருந்து வியூகம் அமைத்து, சிங்­கத்தைக் காட்டில் வேட்­டை­யா­டு­வது கஷ்டம் அதனால் சிங்­கத்தை நாட்­டுக்கு வர­வ­ழைத்து பிடிக்க முயற்சி எடுக்­கின்­றனர். அதன்­படி வீரப்­பனும் கண்­ணுக்கு சத்­திர சிகிச்சை செய்­து­கொள்ள காட்டை விட்டு வெளியே வரு­கிறான்.இங்­கேயும் ஒரு துரோகம் இழைக்­கப்­ப­டு­கின்­றது. வீரப்­ப­னோடு கூடவே இருந்த ஒருவன் வீரப்­பனைக் காட்­டிக்­கொ­டு­க்கின்றான். அதன்­பி­றகு இதே­போல் ஒரு தினத்தில் சரி­யாக 2004ஆம் ஆண்டு ஒக்­டோபர் 18ஆம் திகதி ஒரு வண்­டியில் வீரப்­பனும் அவன் கூட்­டா­ளி­களும் சென்­றுக்­கொண்­டி­ருக்­கையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­கிறான். காட்டுச் சிங்­கத்தின் இரத்த வர­லாறு இத்­தோடு முடி­வு­று­கி­றது.இந்தச் சம்­ப­வத்தில் பல சந்­தே­கங்­களும் உண்டு. அதில் முக்­கி­ய­மா­னது வீரப்­பனை சுட்­டுக்­கொன்­றார்­களா அல்­லது கொன்­று­விட்டு சுட்­டார்­களா என்­பது. காரணம் வீரப்­பனை மோரில் விஷம் கலந்து அவனை குடிக்­க­வைத்­து­விட்­டுத்தான் சுட்­டார்கள் என்று ஒரு தக­வலும் உண்டு. ஆனால் அது நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.ரொபின்­ஹுட்டா வீரப்பன்நிச்­ச­ய­மாக எதிர்­ம­றை­யா­கத்தான் வீரப்­பனை அனை­வரும் உணர்ந்­தி­ருப்­பார்கள். ஆனால் வீரப்பன் வாழ்ந்த காட்­டிற்கு அருகே இருக்கும் கிராம மக்­களோ தங்­களின் காவல் தெய்­வ­மா­கத்தான் வீரப்­பனைப் பார்க்­கி­றார்கள்.செல்­வந்­த­ர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை கள­வாடி ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு வாரி­வ­ழங்கும் இன்­றையக் கால ரொபின்­ஹுட்தான் வீரப்பன் என்­கி­றார்கள் சத்­தி­ய­மங்­கலம் காட்டைச் சுற்­றி­யுள்ள கிரா­ம­வா­சிகள்.அது­மட்­டு­மல்ல கர்­நா­டக காவேரிப் பிரச்­சி­னையைக் கூட ஒற்றை ஆளாக இருந்து சமா­ளித்­தி­ருப்பான் வீரப்பன், ஓக்­க­னேக்கல் நீர் பிரச்­சி­னைக்­கூட வீரப்பன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால் வந்­தி­ருக்­காது என்றும் கூடச் சொல்­லப்­ப­டு­கி­றது.எது எப்­ப­டியோ... வீரப்பன் கொலை­யாளி என்று சட்­டத்தில் சொன்­னாலும் இல்லை அவன் ஒரு கொடை­யாளி என்­றுதான் சொல்­கி­றார்கள் ஊர்­மக்கள்.அது உண்­மை­போ­ல­வும்தான் தெரி­கி­றது. இல்லை என்று போய் நின்றால் அள்ளி அள்ளிக்கொடுப்பானாம் வீரப்பன். அத்தோடு அவன் இறந்தபிறகு அவன் அளவு அதிகமாக செல்வங்களைச் சேர்த்துவைத்தாவன். இத்தனைக் கோடி பணம் மறைத்துவைத்தான் என்று எந்தச் செய்தியும் அவ்வளவாக இல்லாத அளவுக்கு ஏழைப்பங்காளனாகத்தான் இருந்திருக்கிறான்.ஆனாலும், வீரப்பனை நியாயப்படுத்த முடியாது. நிச்சயமாக குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் உதவி செய்திருக்கிறான் என்பதையும் மறுக்க முடியாது.நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும் அந்த பாற மனசுல நீர் இருக்கும்... ஆஹா வீரப்பன் பேர யார் சொன்னாலும் கருவில் இருக்கும் பிள்ளை கை எடுக்கும்...சந்தனக்கடத்தல், யானைத் தந்தம், ஆட்கடத்தல் என்று ஆரம்பித்து சத்தியமங்கலம் காட்டை தனது ராஜாங்கமாக்கி எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம்கொண்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் காட்டை ஆண்டு வந்த காட்டுச் சிங்கம் சாய்ந்து இன்றோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன.கட்டுக் கதை இல்லை... ஒட்டுக் கதை இல்லை... கண்டு கேட்டு வந்தோம் ஒரு வாறு... அந்த சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழ்ந்து செத்தவன் வரலாறு....இவனை எண்ணிக்கொண்டு நெஞ்சில் ஈரம் கொண்டு வாய்க்கால ஓடுது காவேரி நதி...--எஸ்.ஜே.பிரசாத்--Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts