"தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!
நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்
சுவாசிக்க / காற்றை வெளியிட
உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது,
வலது துவாரத்தை மூடி, இடது துவாரம்
வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில்
தலைவலி காணாமல் போய் விடும்.
மிகவும் களைப்பாக இருக்கிறதா?
இடது துவாரத்தை மூடி, வலது துவாரம்
வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில்
களைப்பு போய் விடும்.
- கிரிதரன் மகாதேவன
Saturday, June 29, 2013
தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி
முத்துராமலிங்கத் தேவர்
மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.
Thursday, June 27, 2013
மதுரை பைலட் பிரவீண்
உத்தரகாண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத
வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும்
நிவாரணப் பணிகளில் ராணுவம்
மட்டுமின்றி இந்திய விமானப்படையும்
ஈடுபட்டுள்ளது. ஆபரேசன் ரகத் என்ற பெயரில்
மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
விமானப்படைக்கு சொந்தமான 45
விமானங்களும், ஹெலிகாப்டர்களும்
மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட
எம்.ஐ.17வி 5 ரக ஹெலிகாப்டர்களும்
மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
நேற்று முன்தினம் உத்தரகாண்ட் பகுதியில்
மீண்டும் கனமழை பெய்ததால்
விமானப்படை மீட்புப்பணி நிறுத்தி
வைக்கப்பட்டது. நேற்று மழை ஓய்திருந்ததால்
விமானப்படை மீண்டும்
மீட்புப்பணியை தொடங்கியது. பகல் 12
மணிக்கு மேல் வானிலை மோசமடைந்தது.
அங்கு பணியில் ஈடுபட்ட எம்.ஐ.17 வி5 ரக
ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
அந்த ஹெலிகாப்டர் கவுச்சார் என்ற
இடத்திலிருந்து குப்தகாசி, கேதர்நாத் ஆகிய
இடங்களுக்கு சென்று மீட்புப்பணியில்
ஈடுபட்டு வந்தது.
2 முறை பத்திரமாக
பயணிகளை மீட்டு வந்தது அந்த
ஹெலிகாப்டர். 3-வது முறையாக
பயணிகளை மீட்டுக்
கொண்டு கேதர்நாத்துக்கு திரும்பும் வழியில்
கவுரிக்குண்டு என்ற இடம்
அருகே வந்தபோது திடீரென
விபத்துக்குள்ளானது. மாலை 4 மணிக்கு இந்த
விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம்
செய்த 10 விமானப்படை அதிகாரிகள், 9
இந்தோ திபெத் எல்லைப் படை போலீசார்
உள்பட மொத்தம் 19 பேர் பரிதாபமாக
பலியானார்கள். இதில் மதுரையை சேர்ந்த
விமான பைலட் பிரவீண் என்பவரும்
பலியானார். அவரை பற்றிய உருக்கமான
தகவல்கள் கிடைத்துள்ளது.
மதுரையை சேர்ந்தவர் பிரவீண் (வயது29).
இவரது தாய் மஞ்சுளா. இவர்
மதுரை ரெயில்வே நிலையத்தில் அலுவலக
கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
பிரவீன் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில்
பி.இ. மெகாடிரானிக்ஸ் படித்து முடித்த
நிலையில் 2007-ம் ஆண்டு பைலட்
பயிற்சியும் பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டில்
ஐதராபாத்தில் உள்ள ஏர்போர்ட் அகா டமில்
பயிற்சி பெற்றுள்ளார். டி.சி.எஸ்.
நிறுவனத்தில் பணியாற்றிய பிரவீண்
அதற்கு பிறகு யு.பி.எஸ். தேர்வு மூலம்
விமானப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
கல்கத்தாவில் உள்ள பெரக்கூரில் உள்ள
விமானப்படையில் பைலட்டாக
பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று உத்தரகாண்டில் விபத்தில் சிக்கிய
ஹெலிகாப்டரில் இவரும் ஒரு பைலட்டாக
சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டபோதுதான்
விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
எனது மகன் பிரவீண் நேற்று காலை 9.40
மணிக்கு என்னுடன் தொலைபேசி மூலம்
பேசினான். அப்போது உத்தரகாண்டில்
மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பதாக
தெரிவித்தான். மீட்புப்பணியில்
ஈடுபட்டிருந்தபோது ராகுல்காந்தி உள்ளிட்ட
தலைவர்கள் அந்த பகுதிக்கு வந்து சென்றதாக
தெரிவித்தான்.
யாத்திரிகர்களை ஏற்றி கொண்டு ஹெலிகாப்டர்
புறப்படுவதற்கு முன்பாக நான்
கிளம்பிவிட்டேன் என்று எனது மகன் என்னிடம்
தெரிவித்தான்.
மேலும் அம்மா இங்கு வானிலை மிகவும்
மோசமாக உள்ளது என்றும் கூறினான். நான்
பத்திரமாக சென்று வருமாறு கூறினேன்.
இந்நிலையில்
இன்று காலை விமானப்படை அதிகாரிகள்
டெல்லியில்
இருந்து என்னை தொடர்பு கொண்டு எனது
மகன் இறந்துவிட்ட தகவலை தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான
மதுரை பைலட் பிரவீண் உடல்
இன்று மாலை மதுரை கொண்டு வரப்படுகிறது.
முன்னதாக
இன்று காலை விமானப்படை அதிகாரிகள்,
ராணுவ அதிகாரிகள் பிரவீணின் தாய்
மஞ்சுளாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
விபத்தில் பலியான பிரவீணுக்கு பெண்
பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகள்
நடந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்
அவர் விபத்தில்
பலியானது அவரது தாயாரை நிலைகுலைய
செய்துவிட்டது.
Wednesday, June 26, 2013
Friday, June 21, 2013
மணிவண்ணன் - தமிழன் - Manivannan
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!
11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!
பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம்.
இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று
மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன்
அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால்
உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான்
என்ற உண்மை வெளிப்படும்.
சோழர்களின் தலைநகமான பூம்புகார்
தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500
Popular Posts
-
கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் . காமராஜரின் பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் ...
-
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை. காலை வணக்கம்...
-
அஜித் :இது நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல அஜித் பற்றிய சிலஉண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா ...
-
காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன் இந்திய தமிழ் நாடும் கர்நாடக எல்லையுமான ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்...
-
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூற...
-
தூத்துக்குடி--வரலாறு Toothukkudi History - Tuticorin History தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான...
-
ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்... "பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட் ஆனால் இயற்கை விவசாயத்...
-
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புக by thenuraj New Tamil சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில்...