தமிழால் இணைவோம்:
சுப்பிரமணிய பாரதி
நினைவுதினம் இன்று
(11-09-1921)
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன் முகம் கொண்டவர் பாரதியார்.
பாரதியின் எழுத்துக்கள் நம் நாட்டு விடுதலைக்கு வித்திட்டது. நவீன கவிதைகளுக்கு வித்திட்ட கவிஞன் பாரதி.
பாரதியின் இயற்பெயர் சுப்பையா (எ) சுப்பிரமணியம். சுப்ரமணிய பாரதியின் கவித்திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்க மன்னார் அவரின் அரசவையில் வழங்கப்பட்டது.
1912ல் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார் பாரதி. இந்தியா என்ற பத்திரிகையில் தன் போராட்சி எழுத்துக்களை விதைத்து பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
தன் கவிப்புலமையால் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தவன் பாரதி.
1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.
பாரதியின் உயிர் உலகில் இருந்து விடை பெற்றிருந்தாலும் அவரின் கவிதைகளும், விடுதலைக்காக அவர் எழுதிய வாசகங்களும், அவரின் புகழும் மறையாமல் நெஞ்சில் நிற்கிறது.
"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி.
இந்த கவிதைக்கு சிறந்த உதாரணம் பாரதியை தவிர வேறு யாராக இருக்க முடியும்.
பாரதியின் உடலுக்குத்தான் விடைகொடுத்தோம் அன்று.. வாழும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பாரதியின் உணர்வுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
#நந்தமீனாள்
மதுரை.
தமிழால்
Wednesday, September 11, 2013
சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று (11-09-1921)
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் . காமராஜரின் பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் ...
-
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை. காலை வணக்கம்...
-
அஜித் :இது நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல அஜித் பற்றிய சிலஉண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா ...
-
காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன் இந்திய தமிழ் நாடும் கர்நாடக எல்லையுமான ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்...
-
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூற...
-
தூத்துக்குடி--வரலாறு Toothukkudi History - Tuticorin History தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான...
-
ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்... "பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட் ஆனால் இயற்கை விவசாயத்...
-
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புக by thenuraj New Tamil சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில்...
No comments:
Post a Comment