Thursday, October 31, 2013

சேரன் நடத்தும் திரைப்படப் போட்டி புதிய முயற்சி director seran different idea on advertisment

சேரன் நடத்தும் திரைப்படப் போட்டி புதிய முயற்சி

நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் ஓர் புதிய முயற்சியாக சேரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படப் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

வழக்கமாக, ஒரு திரைப்படம் வெளியான பின்னர் அந்த படத்தின் இடம் பெற்றிருக்கும் பாடல் காட்சிகளின் நடனங்களை மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் நடன இயக்குனர் வடிவமைத்தபடியே மேடைகளில் அரங்கேற்றி வருகின்றனர்.

முதன் முறையாக, திரைப்படம் வெளியாவதற்கு முன்னமே அத்திரைப்படத்தின் காட்சிகள் குறித்த தங்கள் திறமையையும் கற்பனையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இயக்குநர் சேரன் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அழைப்பிதழ் வித்தியாசமான சிறந்த முயற்சி என்று பாராட்டப்பட்டது. படத்தின் விளம்பர யுக்திகளில் புதுமை செய்யும் முயற்சியாக, தமிழில் முதன் முறையாக மூன்று லட்சம் ஆடியோ சிடிக்கள் ஒரு முன்னணி வார இதழுடன் இணைந்து தமிழகமெங்கும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இப்போது அடுத்த கட்டமாக இந்த கல்லூரி மாணவர்களுக்கான போட்டியை சேரன் துவக்கியிருக்கிறார். 'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி தனது பத்தாவது இயக்கத்தில் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை இயக்கித் தயாரித்துள்ள சேரன், வரும் நவம்பர் 22ம் தேதி உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.

நல்ல கதைகளுடன் முற்போக்கு கருத்துகளுடன் வழக்கமாக திரைப்படங்களை இயக்கி வரும் சேரன், 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்திலும் இளைஞர்களை, மாணவர்களை, எதிர்காலத் தலைமுறையை மையமாகக் கொண்ட கதைக்கருவைக் கையில் எடுத்திருக்கிறார்.

அதை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இப்போது 'சேரனின் ஜேகே ஃபெஸ்ட் 2013′ என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். இதன்படி, அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான மேடைத் திறன் போட்டி மற்றும் காட்சிப் போட்டி என்று இரண்டு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

மேடைத் திறன் போட்டியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். ஒரு கல்லூரியில் அதிகபட்சம் நான்கு அணிகள் பங்கேற்கலாம். ஒரு அணியில் குறைந்த பட்சம் இருவரும் அதிக பட்சம் பத்து பேரும் இடம் பெற்றிருக்கலாம். 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் ஏதேனும் ஒரு பாட்டுக்கு மாணவர்கள் தங்கள் கற்பனைத் திறமைப் பயன்படுத்தி, நடனம், நாடகம் அல்லது வேறு பிற வகைகளில் அவர்கள் மேடையில் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

இதற்காக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பெருநகரங்களில் போட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கேற்பவர்களில் சிறந்த பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக இருபத்தைந்தாயிரம் ரூபாயும், மற்ற ஒன்பது குழுக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட இருக்கிறது.

காட்சித் திறன் போட்டியில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் விஷுவல் கம்யூனிகேசன், மாஸ் கம்யூனிகேசன், மற்றும் எலக்ட்ரானிக் மீடியோ ஆகிய இவற்றின் சார்புத் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியும்.

'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் எதேனும் ஒரு பாடல் காட்சிக்கு தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்து, இயக்கி நடிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விதமான இந்த படைப்பை சிறப்பாகப் பதிவு செய்யும் அணிகளில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக எழுபத்தைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

மேலும், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் பதிவு செய்த காட்சிகள் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தோடு இணைக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. படத்துவக்கம், இடைவேளை மற்றும் இறுதியில் இவை இடம் பெறும். இவற்றோடு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரமும், கல்லூரி விபரமும் இடம் பெற்றிருக்கும்.

இப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே, தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளில் இருந்து 82 அணிகள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. மாணவர்களிடையே இப்போட்டிகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பின் காரனமாக போட்டியில் பங்கேற்பதற்கான இருதி நாளாக நவம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் இருபது அணிகளின் படைப்புகள் தந்தி டிவி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர், cheransjktalenthunt@dreamtheatres.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் இளைஞர்களையும், மாணவர்களையும், புதிய தலைமுறையினரையும் அழைத்து வரும் விதமாக இந்தப் போட்டிகள் அமைந்துள்ளன. இதன் மூலம் புதிய பரிமாணங்களில் திரைப்படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக நம்பலாம்.

shared via

Tuesday, October 29, 2013

குதிரையும் ஆட்டுக்குட்டியும் - சிறுகதை Succumbs to reality

சிலநேரங்களில் உண்மைதான் பலியாகிறது!  தமிழ் சிறுகதை
kuthiraiyum aattukuttiyum tamil sirukathai


ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான்.

அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.
kuthiraiyum aattukuttiyum tamil sirukathai

Thursday, October 24, 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது: வைகோ பேட்டி Common wealth conference India not participate Vaiko

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது: வைகோ பேட்டி Common wealth conference India not participate Vaiko

திருப்பத்தூர், அக். 24–

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தினத்தையொட்டி இன்று அவர்களது நினைவு மண்டபத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

இமயம் முதல் குமரி வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரவாளை உயர்த்தியவர்களில் தென் மாவட்டங்களில் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கையில் வேலு நாச்சியார். இவரிடம் சேனாதிபதியாக இருந்து மன்னராக உயர்ந்தவர்கள் இந்த மருதுபாண்டியர்கள். திருப்பத்தூரில் மட்டும் 570 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.

மத்திய அரசு இலங்கைக்கு பல கோடி ரூபாயை அளித்து தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது. அங்கு போர் நடக்க இந்தியாதான் காரணம். காங்கிரஸ் கூண்டில் ஏற்ற வேண்டிய குற்றவாளி. இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தல் கண் துடைப்பு தான்.

இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது என்பது காங்கிரசின் கூட்டு சதி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Sunday, October 20, 2013

சந்தன கடத்தல் வீர்ப்பன் veerappan

காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன்

இந்­திய தமிழ் நாடும் கர்­நா­டக எல்­லை­யு­மான ஒரு அடர்ந்த காட்­டுப்­ப­கு­திக்கு மத்­தியில் ஓர­மாக அமைந்த ஒரு கிரா­மம்தான் கோபி­நந்தம். அந்தக் கிரா­மத்தில் வசித்த முனு­சாமிக் கவுண்டர் மற்றும் புலித்­தா­யம்மா ஆகி­யோ­ருக்கு 1952ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 18ஆம் திகதி பிறக்­கிறான் ஒரு மகன். அவன் தான் சந்­த­ன­மரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்­க­டத்தல்... என தன் ஒவ்­வொரு அசை­விலும் காட்­டுக்­குள்­ளி­ருந்தே நாட்டை அதி­ர­வைத்­தவன்.சின்­னஞ்­சிறு ஆள்­படை வைத்­துக்­கொண்டு வன­துறை அதி­கா­ரி­யி­லி­ருந்து நாட்டின் பல பிர­ப­லங்கள் வரை கன கச்­சி­த­மாகக் கடத்­திக்­கொண்டு போய் காட்­டுக்குள் வைத்துக்­கொண்டு இரண்டு அர­சு­க­ளையே மிரட்டி வனத்­திற்குள் தனி ராஜாங்கம் நடத்தி வந்­தவன்.இத்­தனை நாச வேலை­க­ளையும் அஞ்­சாமல் செய்­து­வந்த அந்த மனி­த­னுக்குள் ஒரு ஓரத்தில் மொழிப் பற்றும் இருக்­கத்தான் செய்­தது. இரக்­க­மில்­லாத அந்த மிரு­கத்­துக்­குள்ளும் மனைவி, குழந்தை என குடும்­பப்­பா­சமும் அதி­க­மா­கவே இருந்­தி­ருக்­கின்­றது.அவன் தான்... கூசி­மு­னு­சாமி வீரப்­பக்க கவுண்டர் என்ற இயற்­பெ­யரைக் கொண்டு பின்­னால் சந்­தனக் கடத்தல் என்ற அடை­மொ­ழியை தன் பெய­ருக்கு முன்னால் வர­வ­ழைத்துக் கொண்ட சந்­தனக் கடத்தல் வீரப்பன்.அந்த ஊர் மக்கள் அவனை மோலக்கண் என்றும் ஒரு சிலர் வீரப்பன் என்றும் அழைத்­தனர்.ஆனால் நமக்­கெல்லாம் அறி­மு­க­மான பெயர் வீரப்பன்...அவன் பெய­ரி­லேயே வீரம் இருந்­த­தாலோ என்­னவோ தன் உயிரை இழக்கும் வரை அவனும் வீர­னா­கவே திகழ்ந்தான்.வீரப்­பனின் வாழ்க்கை என்­பது தமிழ் நாட்டு வர­லாற்றில் ஒரு இரத்த அத்­தி­யா­ய­மா­கவே பதி­வு­செய்­யப்­பட்­டி­ருக்கும். காரணம் கிட்­டத்­தட்ட இரு­பது வரு­டங்கள் வரை அனைத்து ஊட­கங்­க­ளிலும் பர­ப­ரப்­பாக பவ­னி­வந்­தவன் இவன். தமிழ்­நாடு கர்­நா­டகம் என மிகப்­பெ­ரிய மாநில அர­சு­களின் பொலி­ஸா­ருக்கு அவன் காலடித் தடம்­கூட தெரி­யாமல் பார்த்­துக்­கொண்­டவன். ஒன்­றல்ல இரண்­டல்ல வீரப்­பனை பிடிக்க .பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் தகர்த்­தெ­றிந்து தனிக்­காட்டு ராஜா நான்தான் என்­பதை நிரூ­பித்து சிம்ம சொப்­ப­ன­மாகத் திகழ்ந்­தவன் சந்­தனக் கடத்தல் விரப்பன்.வீரப்பன் பிறந்த கோபிந்தம் எனும் கிராமம் மிகவும் பின்­தங்­கிய ஒரு பிர­தேசம். பள்­ளிக்­கூடம் என்ற ஒரு வார்த்­தையைக் கேட்க கூட கொடுப்­பனை இல்­லா­த­வர்­கள்தான் இந்த ஊர் மக்கள். அங்கு மழைக்குக் கூட சற்று ஒதுங்­கி­விட்டுச் செல்ல ஒரு பள்­ளிக்­கூடம் இல்­லாத ஊர் அது. ஏன் அதை அண்­டிய கிரா­மங்­களில் பள்­ளிக்­கூடம் இருக்­குமே? என்­றாலும் கூட அங்­கேயும் இதே நிலைதான். இப்­ப­டி­யி­ருக்கும் கிரா­மத்தில் ஒருவன் எப்­படி படிப்­ப­றிவைக் கொண்­டி­ருப்பான். அப்­ப­டி­யேதான் வீரப்­பனும் படிப்பின் வாச­னையே என்­னென்று அறி­யா­தவன் அவன்.வீரப்பன் சிறு­வ­னாக இருந்­த­போது அவன் செய்த வேலை மாடு மேய்ப்­பது. அதை அவன் விரும்பிச் செய்தான். அந்­நே­ரங்­களில் வீரப்­பனின் உச்­சக்­கட்ட மகிழ்ச்­சியே மந்­தை­யி­லுள்ள மாடு ஒன்றின் மீது ஏறி உட்­கார்ந்­து­கொண்டு ஏனைய மாடு­களை மேய்ப்­ப­துதான்.இப்­படி மாடு மேய்த்து மகிழ்ச்­சி­ய­டைந்த விரப்பன் இறு­தியில் மாபெரும் பயங்­க­ர­மான மனி­த­னாக மாறி­யது எப்­படி?இப்­படி மாடு­களை மேய்த்தும் சிறு சிறு குறும்­பு­களில் தன் பொழுதைக் கழித்­து­வந்த வீரப்­ப­னுக்கு ரோல் மாட­லாக விளங்­கு­கிறார் ஒருவர். அவர் பெயர் சால்வை கவுண்டர். இவர் செய்­து­வந்த வேலை என்ன தெரி­யுமா?இவர் ஒரு காட்டு கடத்தல் காரர். இவரும் கிட்­டத்­தட்ட இரு­பத்­தைந்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக காட்டுப் பகு­தியில் கடத்தல் தொழிலைச் செய்­து­வந்தார்.அவ­ரிடம் வேலைக்குச் சேர்ந்தான் வீரப்பன்.மாடு மேய்த்­துக்­கொண்­டி­ருந்த ஒரு சிறுவன் பின்­னாளில் பயங்­க­ர­மான ஒரு­வ­னாக மாறு­வ­தற்கு அடிகோலியது சால்வைக் கவுண்­ட­ருடன் வீரப்பன் கொண்­டி­ருந்த சிநே­கம்தான். மாடு ஒன்றின் மீது உட்­கார்ந்து­கொண்டு மாடு­களை மேய்ப்­பதை விட கடத்தல் தொழில் நடத்­து­வது மிகவும் சிர­மமானது என்­பது விரப்­ப­னுக்குத் தெரி­யாமல் இருந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.இருந்தும் கடத்தல் தொழிலை செய்ய விரும்­பு­கிறான் என்றால் அதில் வரும் பணம் மாடு மேய்ப்­பதால் வராது என்­பதை உணர்ந்­தி­ருக்­கிறான்.சந்­தனக்கடத்தல் வீரப்­பனைப் பற்றிப் பேசும்­போது நாம் சந்­த­ன­ம­ரத்தைப் பற்­றியும் கொஞ்சம் பேசத்­தானே வேண்டும்...சந்­த­ன­மரம் பண்­டைய இந்­தி­யாவில் மிக்க மதிப்­பு­டைய ஒரு பொருள். கர்­னா­டகா, கேரளா, தமி­ழகம் ஆகிய வன­ப­கு­தி­களில் மட்­டுமே விளை­வது இந்த சந்­தன மரங்கள். திப்பு சுல்தான் காலத்தில் போர்­க­ளுக்கு நிதி வேண்டும் என்ற நோக்கில் சந்­த­ன­மர வளர்ப்பை தேசிய மய­மாக்­கினார். 1792இல் போடப்­பட்ட இந்த சட்டம் அதன்­பின்னர் வந்த கர்­னா­டகம், மெட்ராஸ் ராஜ்­ஜியம் அர­சு­களால் தொடர்ந்து பின்­பற்­ற­பட்டு இந்­தியா சுதந்­திரம் வாங்கி திப்­பு­சுல்தான் ஆண்ட பகு­திகள் மூன்று மாநி­லங்­க­ளாகி பிரிந்த பின்­னரும் சட்­ட­புத்­த­கத்­தி­லேயே இருந்து வந்­தது.இந்த சட்­டப்­படி சந்­தன மரம் முழுக்க அர­சுக்கே சொந்தம். யார் வீட்டில் சந்­தன மரம் வளர்த்­தாலும் அதை வெட்­டினால் அது அர­சுக்கே சொந்தம். இதனால் சந்­த­ன­ம­ரத்தை தனியார் யாரும் வளர்ப்­ப­தில்லை.காட்டில் இயற்­கை­யாக விளையும் சந்­த­ன­ம­ரத்தை வெட்­டினால் அரசு வன இலாகா அதி­கா­ரிகள் பிடித்து தண்­டிப்­பார்கள். இப்­படி விதி­மு­றைகள் இருந்­ததால் வழக்கம் போல வன இலாகா அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்சம் கொடுத்து சந்­த­ன­மரம் வாங்கி விற்­பது அர­சிடம் கோட்டா முறையில் சந்­தன கட்­டை­களை வாங்கி விற்­பதை விட லாப­க­ர­மான தொழி­லா­னது. இப்­ப­டிப்­பட்ட பொரு­ளா­தார முறையில் உரு­வான கள்ள சந்­தையின் விளைவே வீரப்பன்.அவன் செய்­தது என்­னவோ காட்டில் இயற்­கை­யாக கிடைக்கும் மரத்தை வெட்­டி­யது. அது சட்­ட­ப்படி குற்றம் என்­றா­னதால் அவன் குற்­ற­வாளி ஆனான். அதன்பின் கொலைகள், கொள்ளை,கடத்தல் என அவன் போக்கு மாறி­யது...சரி இப்­போது சந்­த­னக்­க­டத்தல் வீரப்பன் கதைக்கு வருவோம்...சால்வைக் கவுண்­ட­ரோடு இணைந்து வீரப்பன் சந்­தன மரங்­களை வெட்டிக் கடத்தல் தொழில் செய்­து­வந்தான். அத்­தோடு யானை­களைக் கொன்று அதன் தந்­தங்­களை திருடி விற்­று­வந்தான். இந்த தொழிலில் நல்ல லாபம் வர தனக்­கென்று ஒரு கூட்­டத்தை அமைத்­துக்­கொண்டு காட்­டிற்குள் ஒரு ராஜாங்­கத்­தையே உரு­வாக்­கி­விட்டான் வீரப்பன்.இப்­ப­டி­யாக பல சட்­ட­வி­ரோதச் செயல்­களைச் செய்­து­வந்த வீரப்­பனை பிடிக்க வனத்­துறை அதி­கா­ரிகள் முயன்­ற­போது அவன் ஒவ்­வொ­ரு­வ­ராக கொலைசெய்தான். இப்­ப­டித்தான் அவ­னு­டைய கொலைப் படலம் ஆரம்­ப­மா­கியது.யானைத்­தந்தம், சந்­தன மரம் கடத்தல் தொழிலில் அதி­க­ளவு பணம் சம்­பா­தித்து வந்த வீரப்­பனின் அடுத்து முக்­கி­ய­மான குற்றச் செயல்தான் ஆட்­க­டத்தல் மற்றும் மிரட்டல், பிணைத் தொகை இவை. இந்தத் தொழிலில் முக்­கி­ய­மாகக் கடத்­தப்­பட்­ட­வர்கள் பலரும் கல் குவாரி தொழி­ல­தி­பர்கள்.ஒரு­வரைக் கடத்­தினான் என்றால் ஒரு கேசட் மட்டும் கடத்­தப்­பட்­ட­வரின் உற­வி­ன­ருக்கு வரும் அந்­தக கசட்டில் அவர் என்­னென்ன செய்ய வேண்டும் அதை எப்­படி செய்ய வேண்டும் என்று அனைத்தும் இருக்கும். அதன் படி செய்­து­விட்டால் கடத்­தப்­பட்­டவர் சிறு கீறல்­கூட இல்­லாமல் திரும்­பி­வி­டுவார்.வீரப்பன் சொன்­னது படி நடந்­து­கொள்­ளா­விட்டால் கடத்­தப்­பட்­ட­வரின் சடலம் கூட உற­வி­ன­ருக்குக் கிடைக்­காது.இப்­படிப் பல கடத்­தல்கள். இதில் முக்­கி­ய­மான கடத்­தல்தான் கன்­னட சூப்பர் ஸ்டார் என்று வர்­ணிக்­கப்­படும் கன்­னடத் திரைப்­பட நடிகர் ராஜ்­கு­மாரின் கடத்தல்.கிட்­டத்­தட்ட 72 வயதை எட்­டி­யி­ருந்த ராஜ்­குமார் தனது பண்ணை வீட்டில் இரவு நேர உணவை உண்­டபின் சற்று இளைப்­பா­றிக்­கொண்­டி­ருந்த சமயம். கன்­னடத் திரைப்­படத் துறையின் முக்­கி­ய­மான ஒரு தூண் என்றே சொல்­லலாம் ராஜ்­கு­மாரை. அவ­ரோடு சேர்த்து இன்னும் பலரும் இருக்­கி­றார்கள். பண்ணை வீட்டில் அனை­வரும் உறங்க இடம் போதாது என்­ப­தனால் பண்ணை வீட்­டிற்கு முன்­பாக உள்ள புதி­தாகக் கட்­டப்­பட்ட ஆடம்­பர மாளி­கையை நோக்­கி செல்­கின்­றனர் சிலர்.அப்­போது மணி சரி­யாக 9.30.ஐத் தொட்­டி­ருக்கும். பங்­க­ளாவை நோக்­கி நடந்த ராஜ­்கு­மா­ரோடு இருந்த நாகராஜ் என்­ப­வரின் சட்­டையை இறுக்­க­மாக ஒரு கை வந்து பிடித்து இழுக்­கி­றது.தடித்த கர­க­ரப்­பான ஒரு குரலில் இப்­படிச் சொல்­கி­றது... நான் வீரப்பன்!அடர்ந்த இருட்டு. அந்த இருட்டில் வீரப்­பனின் மீசை தனி­யாகத் தெரி­கின்­றது. வீரப்­ப­னோடு சேர்த்து கூட்­டா­ளிகள் பத்துப் பேர்.வீரப்பன் மீண்டும் பேசு­கிறான்... ராஜ்­குமார் எங்கே?அவர் பழைய வீட்டில் இருக்­கிறார்.தன்­னோடு வந்த கூட்­டா­ளி­களில் ஐந்து பேரைக் காவ­லுக்கு வைத்­து­விட்டு மீத­முள்ள கூட்­டா­ளி­களோடு பழைய வீட்டை நோக்கி செல்­கிறான் வீரப்பன்.வெளியில் நடப்­பவை எதையும் அறி­யாத ராஜ்­குமார் வீட்­டிற்குள் உட்­கார்ந்து தொலைக்­காட்­சியைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறார்.திடு­தி­டு­வென உள்ளே நுழைந்த வீரப்பன், துப்­பாக்­கியை நீட்டி எங்கே ராஜ்­குமார் என்று அதே உரத்தக் குரலில் கேட்­கிறான். உடனே எழுந்­து­நின்­றவர் நான்தான் ராஜ்­குமார் என்­கி­றார்.உடனே வீரப்பன்...துப்­பாக்­கியை ராஜ்­கு­மாரின் பக்கம் நீட்டி நான் வீரப்பன், நீங்கள் என்­னோடு வர வேண்டும் என்று சொல்­லு­கிறான். உடனே ராஜ்­கு­மாரின் மனைவி திடு­திப்­பென்று எழுந்து உனக்கு என்ன வேண்டும் கேள் எவ்­வ­ளவு பணம் வேண்டும் சொல் தந்­து­வி­டு­கிறோம். அவரை விட்டு விடு என்று வீரப்­பனைப் பார்த்துச் சொல்­கிறார்.அப்­படிச் சொல்­லிக்­கொண்­டி­ருக்க வீரப்­பனின் கூட்­டாளி ஒருவன் ராஜ்­கு­மாரின் கைகளைக் கட்­டு­கிறான்.வீரப்பன் அதே தடித்த குரலில் சொல்­லு­கிறான்... யாரும் சத்தம் போடக் கூடாது. நான் இப்­போது அவரை அழைத்துச் செல்லப் போகிறேன். ஏன் எதற்கு என்று இப்­போது சொல்ல முடி­யாது...சார் எனக்கு வேண்டும்... அவ்­வ­ள­வுதான்.நான் அவ­ருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். நீங்கள் அஞ்சத் தேவை­யில்லை அவர் பத்­தி­ர­மாக என்­னோடு இருப்பார் என்று சொன்ன வீரப்பன். தன் கையி­லி­ருந்த ஒரு கசட்டை ராஜ்­கு­மாரின் மனை­வி­யிடம் கொடுத்து... இந்த கசட்டை கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்­லி­விட்டு புறப்­ப­டு­கிறான்...வெளியே வந்த வீரப்பன் ராஜ்­கு­மா­ரோடு இருந்­த­வர்­களில் மூவரைப் பார்த்து நீங்கள் மூவரும் ராஜ்­கு­மா­ருடன் வர வேண்­டு­மென வீரப்பன் சொல்­கிறான். அவர்­க­ளையும் அழைத்­துக்­கொண்டு நடக்க ஆரம்­பிக்­கிறான்.நடந்­து­கொண்டு கொஞ்சம் சத்­த­மா­கவும் திமிற­ரான குரல் நயத்­து­டனும் சொல்­கிறான்...அம்­மா­விடம் ஒரு கசட் கொடுத்­தி­ருக்­கிறேன். அது உடனே கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரிடம் போய் சேர வேண்டும். இப்­படிச் சொல்­லிக்­கொண்டு நடந்து சென்ற வீரப்பன் இருட்டில் மறைந்­து­வி­டு­கிறான்.அப்­போ­தைய கர்­நா­டக முத­ல­மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. தமிழ்­நாட்டின் முத­லமைச்சர் மு.கரு­ணா­நிதி. இரு­வரும் ஒன்று கூடி பேசி­விட்டு. ராஜ்­கு­மாரை விடுவித்­துக்­கொள்ள தூது அனுப்ப முடி­வெ­டுக்­கி­றார்கள். தூது போவது நக்­கீரன் புல­னாய்வு சஞ்­சி­கையின் ஆசி­­ரியர் நக்­கீரன் கோபால்.அத்­தோடு நெடு­மா­றனும் அனுப்பி வைக்­கப்­ப­டு­கிறார். கிட்­டத்­தட்ட 109 நாட்கள் வரை வீரப்­ப­னிடம் பணயக் கைதி­யாக இருந்த ராஜ்­குமார் எந்த அசம்­பா­வி­தமும் நிக­ழாமல் விடு­தலை செய்­யப்­ப­டு­கிறார்.இந்தக் கடத்தல் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வையும் அதிர்ச்­சி­யடையச் செய்­தது.இப்­ப­டி­யாக வீரப்­பனின் அட்­டா­காசம் தாங்­காமல் இரு மாநில பொலிஸ்­களும் சேர்ந்து ஒரு பொலிஸ் குழுவை உரு­வாக்கி வீரப்­பனை பிடிக்க ஒரு திட்டம் தீட்­டு­கின்­றனர்.இந்தத் திட்­டத்தில் விஜ­யகுமார் தலை­மை­யேற்று நடத்­தி­மு­டிக்­கிறார். பல நாட்கள் காத்­தி­ருந்து வியூகம் அமைத்து, சிங்­கத்தைக் காட்டில் வேட்­டை­யா­டு­வது கஷ்டம் அதனால் சிங்­கத்தை நாட்­டுக்கு வர­வ­ழைத்து பிடிக்க முயற்சி எடுக்­கின்­றனர். அதன்­படி வீரப்­பனும் கண்­ணுக்கு சத்­திர சிகிச்சை செய்­து­கொள்ள காட்டை விட்டு வெளியே வரு­கிறான்.இங்­கேயும் ஒரு துரோகம் இழைக்­கப்­ப­டு­கின்­றது. வீரப்­ப­னோடு கூடவே இருந்த ஒருவன் வீரப்­பனைக் காட்­டிக்­கொ­டு­க்கின்றான். அதன்­பி­றகு இதே­போல் ஒரு தினத்தில் சரி­யாக 2004ஆம் ஆண்டு ஒக்­டோபர் 18ஆம் திகதி ஒரு வண்­டியில் வீரப்­பனும் அவன் கூட்­டா­ளி­களும் சென்­றுக்­கொண்­டி­ருக்­கையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­கிறான். காட்டுச் சிங்­கத்தின் இரத்த வர­லாறு இத்­தோடு முடி­வு­று­கி­றது.இந்தச் சம்­ப­வத்தில் பல சந்­தே­கங்­களும் உண்டு. அதில் முக்­கி­ய­மா­னது வீரப்­பனை சுட்­டுக்­கொன்­றார்­களா அல்­லது கொன்­று­விட்டு சுட்­டார்­களா என்­பது. காரணம் வீரப்­பனை மோரில் விஷம் கலந்து அவனை குடிக்­க­வைத்­து­விட்­டுத்தான் சுட்­டார்கள் என்று ஒரு தக­வலும் உண்டு. ஆனால் அது நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.ரொபின்­ஹுட்டா வீரப்பன்நிச்­ச­ய­மாக எதிர்­ம­றை­யா­கத்தான் வீரப்­பனை அனை­வரும் உணர்ந்­தி­ருப்­பார்கள். ஆனால் வீரப்பன் வாழ்ந்த காட்­டிற்கு அருகே இருக்கும் கிராம மக்­களோ தங்­களின் காவல் தெய்­வ­மா­கத்தான் வீரப்­பனைப் பார்க்­கி­றார்கள்.செல்­வந்­த­ர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை கள­வாடி ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு வாரி­வ­ழங்கும் இன்­றையக் கால ரொபின்­ஹுட்தான் வீரப்பன் என்­கி­றார்கள் சத்­தி­ய­மங்­கலம் காட்டைச் சுற்­றி­யுள்ள கிரா­ம­வா­சிகள்.அது­மட்­டு­மல்ல கர்­நா­டக காவேரிப் பிரச்­சி­னையைக் கூட ஒற்றை ஆளாக இருந்து சமா­ளித்­தி­ருப்பான் வீரப்பன், ஓக்­க­னேக்கல் நீர் பிரச்­சி­னைக்­கூட வீரப்பன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால் வந்­தி­ருக்­காது என்றும் கூடச் சொல்­லப்­ப­டு­கி­றது.எது எப்­ப­டியோ... வீரப்பன் கொலை­யாளி என்று சட்­டத்தில் சொன்­னாலும் இல்லை அவன் ஒரு கொடை­யாளி என்­றுதான் சொல்­கி­றார்கள் ஊர்­மக்கள்.அது உண்­மை­போ­ல­வும்தான் தெரி­கி­றது. இல்லை என்று போய் நின்றால் அள்ளி அள்ளிக்கொடுப்பானாம் வீரப்பன். அத்தோடு அவன் இறந்தபிறகு அவன் அளவு அதிகமாக செல்வங்களைச் சேர்த்துவைத்தாவன். இத்தனைக் கோடி பணம் மறைத்துவைத்தான் என்று எந்தச் செய்தியும் அவ்வளவாக இல்லாத அளவுக்கு ஏழைப்பங்காளனாகத்தான் இருந்திருக்கிறான்.ஆனாலும், வீரப்பனை நியாயப்படுத்த முடியாது. நிச்சயமாக குற்றவாளிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் உதவி செய்திருக்கிறான் என்பதையும் மறுக்க முடியாது.நன்மை செஞ்சா ஊரில் யாவருக்கும் அந்த பாற மனசுல நீர் இருக்கும்... ஆஹா வீரப்பன் பேர யார் சொன்னாலும் கருவில் இருக்கும் பிள்ளை கை எடுக்கும்...சந்தனக்கடத்தல், யானைத் தந்தம், ஆட்கடத்தல் என்று ஆரம்பித்து சத்தியமங்கலம் காட்டை தனது ராஜாங்கமாக்கி எந்த சந்தர்ப்பத்திலும் அசராத வீரம்கொண்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் காட்டை ஆண்டு வந்த காட்டுச் சிங்கம் சாய்ந்து இன்றோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன.கட்டுக் கதை இல்லை... ஒட்டுக் கதை இல்லை... கண்டு கேட்டு வந்தோம் ஒரு வாறு... அந்த சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழ்ந்து செத்தவன் வரலாறு....இவனை எண்ணிக்கொண்டு நெஞ்சில் ஈரம் கொண்டு வாய்க்கால ஓடுது காவேரி நதி...--எஸ்.ஜே.பிரசாத்--Show commentsOpen link

Saturday, October 19, 2013

குறளின் குரல் - 549

குறளின் குரல் - 549

19th Oct 2013

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

                         (குறள் 542: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:

vAnOkki vAzhum ulagellAm mannavan

kOlnOkki vAzhung kuDi

vAnOkki – Expecting the benevolent rains from the skies

vAzhum – live

ulagellAm – all lives on earth

mannavan – like wise, a ruler's

kOlnOkki – expecting rule of unbent scepter (just)

vAzhung – live

kuDi – the citizens

In the chapter on "Glory of Skies (Rains)", a verse, "nIrindru amaiyAdu ulagu enin yAr yArkkum vAninRu amaiyAdu ozukku" said, without water there is no life or world, and without the skies that act with such benevolence, there is no order in this world either. Going along with the same thought, here in this chapter he says, "All lives in this world depend on rains from skies; likewise only depending on unbent scepter that renders just without partiality, live the citizens.

A poem from nAnmaNikaDigai again expresses the same with words, " kOl nOkki vAzhum kuDiyellAm – tAi mulaiyin pAl nOkki vAzhum kuzhavigaL – vAnath thuLi nOkki vAzhum ulagam".

"Lives on earth look up to skies for rains for life

So do the citizens at rulers, for life without strife"

தமிழிலே:

வானோக்கி - வானத்திலிருந்து பொழியும் மழையை எதிர் நோக்கி, அதன் கொடையால்

வாழும் - வாழ்கின்றன

உலகெல்லாம் - உலகத்து உயிர்களெல்லாம்

மன்னவன் - ஆள்கின்றவருடைய

கோல்நோக்கி - செங்கோல் கோணாத ஆட்சியை எதிர் நோக்கி

வாழுங் - வாழ்கின்றனர்

குடி - குடிமக்கள் எல்லோரும்.

வான்சிறப்பு அதிகாரத்தில், "நீரின்று  அமையாது  உலகுஎனின் யார் யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு" என்ற குறளில் நீர் இல்லாமல் உலகம் இல்லை என்றும், அத்தகைய நீரை வாரி வழங்கும் வான்கொடை இல்லையெனில், உலகின் கண் ஒழுங்கு முறைகள் குலைந்துவிடும் என்று சொன்னார் வள்ளுவர். அக்கருத்தை ஒட்டியே இவ்வதிகாரத்திலும் இக்குறளில் சொல்லுகிறார். வானத்து மழையை நம்பி உலகத்து உயிர்களெல்லாம் இருக்கின்றன, வாழ்கின்றன. அதேபோல ஆளுவோருடைய வளையாத செங்கோலை நம்பியே குடிமக்கள் எல்லோரும் வாழ்கின்றனர் என்பதே இக்குறளின் கருத்து.

இக்கருத்தையொத்த நான்மணிக்கடிகைப் பாடலொன்று, " கோல் நோக்கி வாழும் குடியெல்லாம் தாய் முலையின் பால் நோக்கி வாழும் குழவிகள் - வானத் துளி நோக்கி வாழும் உலகம்", என்கிறது. உயிர் வாழ மழை எவ்வளவு தேவையோ, குடிமக்கள் ஒழுங்கும் கட்டுப்பாடுடனும் வாழ, ஆளுவோர் தம்முடைய நீதி குலையாத, செங்கோல் வளையாத ஆட்சியைத் தரவேண்டும்.

இன்றெனது குறள்:

மழைவழி பார்த்திவ் வுலகுவாழும் செங்கோல்

பிழையாக்கோன் பார்க்கும் குடி

mazhaivazhi pArthiv ulaguvAzhum sengOl

pizhaiyAkkOn pArkkum kuDi

shared via

Saturday, October 12, 2013

நடிகை சினேகா பிறந்தநாள் actress sneka birthday

நடிகை சினேகா பிறந்தநாள்

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

நடிகை சினேகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழ் திரையுலகில் கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சிரிப்பழகி என வர்ணிக்கப்பட்டவர் சினேகா. 2000–த்தில் 'என்னவளே' படத்தில் அறிமுகமானார். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். 'பார்த்திபன் கனவு' படத்தில் சிறந்த நடிகைகான விருது பெற்றார்.

கமலுடன் ஜோடி சேர்ந்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் முன்னணி நடிகை அந்தஸ்தை கொடுத்தது. ஆட்டோகிரப் படத்தில் நல்ல தோழியாக வந்தார். இப்படத்தில் அவர் பாடிய 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே' பாட்டு தேசிய விருதை பெற்றது.

'அது' என்ற பேய் படத்தில் பயம் காட்டினார். புதுப்பேட்டை படத்தில் விலைமாது வேடத்தில் வந்தார். பவானி ஐ.பி.எஸ். படத்தில் விஜயசாந்தியாக ஆக்ஷன் செய்தார். தற்போது பண்ணையாரும் பத்மினியும், உன் சமையல் அறையில், விடியல் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

The post நடிகை சினேகா பிறந்தநாள் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Thursday, October 10, 2013

தழிழரின் ஓலம் tamilargalin oolam

தழிழரின் ஓலம்

தமிழர்களின் பிறப்பிடமே இலங்கை தான்

இன்று இலங்கை யிலிருந்து     தமிழர்கள் எவ்வாறு விரட்டி அழிக்கப்பட்டர்களோ இதே நிலைமை

இன்னும் 50 ஆண்டுகளில்  தமிழர்கள் தமிழ் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள்

by luxshan tharmalingam
சிரிப்பு Archives | Tamilsway

தமிழர்களால் ஈழம் அல்லது இலங்கை என்றழைக்கபடும் இந்துசமுத்திரத்தின் நித்திலம் என்று வர்ணிக்கபடும் அழகிய தீவு எம் தேசம் ஆனால் இப்போது வந்தேறு குடிகளாக தொக்கி நிற்கும் பெளத்த சிங்க இனவாதத்தின் பெயராம் சிறீலங்கா

எம் தாய் பூமியில் கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரீகம் ஆரம்பித்துவிட்டது அப்போது இயக்கர், நாகர், வேடர் என்ற பழங்குடிகள் தொல்திராவிடமொழி அல்லது எலி என்ற பண்டைய தழிழ்மொழியின் வடிவத்தை பயன்படுத்தினர்.

கி.மு-05ம் நூற்றாண்டு:- இக்காலப்பகுதியில் தழிழ் பெயர்களைக்கொண்ட மூன்று அரசுகளான நாகதீவு, தம்பபன்னி,களனி ஆகியவை அரியணையில் இருக்கின்றன. இந் நிலையில் பலர் வட இந்தியாவில் இருந்து ஈழத்தில் குடியேற ஆரம்பிக்கின்றனர். இந்த காலப்பகுதியிலேயே பெளத்த சிங்களத்தின் ஆரம்பகுடியேறியான விஐயனும் அவனது 700 தோழர்களும் எம் தாயகபூமிமீது காலடிவைப்பதாக பெளத்த சிங்களத்தை பிரதிபலிக்கும் நூலான மகாவம்சம் கூறுகிறது.

பழங்குடிமக்களின் அரசனின் மகளான குவேனியை இந்தவந்தேறு குடிகளின் தலைவனாம் விஐயன் மணம்புரிந்து பின் அவளது தந்தையை, விஐயனும் அவனது தோழர்களும் கொலைசெய்து ஆட்சியை கைப்பற்றுகிறனர் பின் குவேனியையும் துரத்திவிடுகின்றனர் அதேவேளை அவர்களுக்கு தேவையான இளவரசிகளையும் பணியாளர்களையும் வட இந்தியாவிலிருந்து அழைத்து வருகின்றனர் இவர்களின் வழித்தோன்றல்களாகவே இன்றைய சிங்கள இனவாத சமூகம் தொக்கி நிற்பதாக பெளத்தசிங்கள நூலான மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

கி.மு 3ம் நூற்றாண்டு:- மெளரிக பேரரசன் அசோகன் கலிங்கத்துகு எதிராக போர்தொடுக்கிறான் இப் போர் பலயிழப்புகளை ஏற்படுத்தினாலும் அசோகணே இப் போரை வெற்றிகொள்கிறான் ஆனால் இவ் இரத்தவெறிபிடித்த போரும் அதன் உயிரிழப்புகளும் அவனை கவலையில் ஆழ்த்தவே அன்பையும் தர்மத்தையும் போதித்த பெளத்தத்தை தழுவி அதனை பரப்புரை செய்யதொடங்குகிறான்.

இந் நிலையில் அசோகமன்னனின் தூதுவரான மகிந்ததேரர் இலங்கைக்கு வருகிறார் அப்போது இலங்கை அநூராதபுரத்தை ஆட்சி செய்துவந்த தேவ நம்பியதீசன் பெளத்தத்தை ஏற்றுகொள்கிறான் இவ்வாறே எம் ஈழத்தில் பெளத்தம் பரவ ஆரம்பிக்கிறது.

சிவ வழிபாடும் சிறு தெய்வவழிபாடும் செறிந்து காணப்பட்ட ஈழத்தில் பெளத்தம் எழுச்சிகொள்கிறது மன்னன் எவ்வழியோ குடிகளும் அவ் வ்ழியே என்றகோட்பாட்டுக்குகிண்ங்க பெளத்தத்திற்கான செல்வாக்கு அல்லது கரிசனை அதிகரிக்க ஆரம்பித்தது இதை அறிந்த அசோகன் இலங்கையின் வளர்ச்சிக்காக பல துறை நிபுணர்களையும் வேலையாட்களையும் அணுப்பிவைக்கிறான்.

தழிழனான எல்லாளனது அரசாட்சி அநுராதபுரத்தில் மிகவும் சிறப்புமிக்க காலமாக விளங்கிய ஓர் காலப்பகுதி சிவ வழிபாட்டில் அதீத நம்பிக்கை கொண்டவனான இவன் பெளத்தமதத்திற்கும் உரியமரியாதையை வழங்குகிறான் அதுமட்டுமன்றி எல்லோரையும் ஓர் நாட்டுமக்கள் என்ற தொனியில் ஆட்சிசெய்துவருகிறான் இதனால் இவனுக்கு எல்லா இன மக்கள்மத்தியில் நன்மதிப்புபெற்றவனாக 44 வருடங்கள் ஆட்சிபுரிந்தான் இக்காலப்பகுதியில் பல சிங்கள மன்னர்கள் இவனுக்கெதிராக படையெடுத்தும் தோல்வியையே தழுவி நின்றனர் இவ்வாறு 44 வருடங்கள் தொடர்ந்து ஆட்சிசெய்த எல்லாளனை தோற்கடிப்பதற்காக துட்டகாமினி என்ற சிங்கள இளைஞன் படைதிரட்டி வருகிறான் இருவருக்கிடையிலும் கடுமையான போர் நடக்கிறது போர் இழப்புகளை தவிர்கவிரும்பிய எல்லாளன் துட்டகாமினியை நாம் இருவரும் நேருக்கு நேர் போர் புரிவோம் என அழைக்கிறான்

இளைஞனான துட்டகாமினிக்கும் வயதான எல்லாளனுக்கும் கடும்போர் நிகழ்கிறது இலங்கையின் தென்பகுதியிலிருக்கும் றோகனப்பகுதியின் இளவரசனான துட்டகாமினி நடந்தசண்டையில் வெற்றிகொண்டு அநுராதபுர ஆட்சியை தழிழர் கையிலிருந்து எடுத்துகொள்கிறான்.

இந்த துட்டகாமினியை முன் நிறுத்தியே இலங்கை சிங்கள பெளத்த நுலான மகாவம்சத்தை மகா நாம தேரர் எழுதுகிறார்.

அன்று போன என் ஈழம் திரும்பவில்லை என்னும் ஆனால் அது திரும்பவேண்டும் எம்மினத்துக்கு

இது புலிகளின் தாகம் மட்டும் அல்ல…..
இது தமிழரின் ஓயாத தாகமாக………
என்றும் உள்ள தமிழீழம் என்ற தாகம்……..

ஓலம் தொடரும்………….

The post தழிழரின் ஓலம் appeared first on Tamilsway.

Show commentsOpen link

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புக actor M.R.Radha

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புக
by thenuraj
New Tamil

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!

சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான்' என்பார்!

ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937), கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979),சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். 'நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதிவைப்பார்!

எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!


Show commentsOpen link

Tuesday, October 8, 2013

இஸ்லாத்தில் இந்து மத சடங்கு

இஸ்லாத்தில் இந்து மத சடங்கு

by Marikumar

இஸ்லாம் மதம் என்பது முகமது நபி அவர்களுக்கு இறைவன் தனியாக அறிவித்தது அதில் இறைவனின் சொந்தக் கருத்துக்கள் கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பல இஸ்லாமிய பெருமக்கள் நம்புகிறார்கள் மற்ற மதத்தாரிடம் பிரச்சாரமும் செய்கிறார்கள்

நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா? அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா? என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது

அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பு விக்கிரக வணக்க மதமும், யூத மதமும், கிறிஸ்த்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.

யூத கிறிஸ்த்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்பு அந்த பகுதிகளில் சூரிய வழிபாடும், லிங்க வழிபாடும் மற்றும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது

புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள்.

மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம்.

இயேசு பிறப்பதற்கு முன்னூற்றி அறுபது வருஷத்திற்கு முன்பே அரேபியாவில் யூத மதம் காலூன்றி விட்டது. அப்போதைய ஏமன் மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம்.

மேலும் அரேபியாவிலுள்ள குரேஷியர்கள் காலங்காலமாக சிலை வணக்கத்தையே மேற்கொண்டிருந்தனர்.

இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்.

ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார்.

அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம்.
குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்கிறது.

இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை பார்க்கலாம்.

இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது.

தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும்

இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும்.

வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது.

மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

உயிர் கொலை செய்யக் கூடாது.

இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும்.
இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது
இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

குரனுக்குள் ஆழமாக நுழைந்து சென்றால் அர்த்த சாஸ்திரத்தின் சில கருத்துக்கள் பரவி கிடப்பதை காணலாம்.

இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது

இஸ்லாமிய சட்டமான ஷரியத் ஒன்றை தவிர மீதம் எல்லாமே மற்றும் சில மதங்களில் இருந்து கடனாக பெற்றது போல் தான் தோன்றுகிறது

இஸ்லாமியர்களின் தனித்துவமான பழக்கம் என்று சொல்லப்படும் சுன்னத் கூட யூதர்களிடம் இருந்து வந்ததே ஆகும்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு முற்றிலுமாக அடி பணிதல் அவனை மட்டுமே வழி படுதல் என்ற பொருள் சொல்லப்படுகிறது

மேலும் இறைவனுடைய விருப்பத்தையே தனது விருப்பமாகவும் அவனது வெறுப்பை தனது வெறுப்பாகவும் ஆக்கி கொள்ளுதல் இஸ்லாத்தின் உயிர் சட்டமாக கருதப்படுகிறது

இந்த எண்ணம் நம்பிக்கை மனிதனிடம் வளர்ந்தால் மனங்களின் ஊசலாட்டம் ஆசாபாசங்கள் மற்றும் இச்சைகள் எல்லாம் மறைந்து இறை சிந்தனையில் உள்ளம் நிரம்பி வழியும் என்றும் சொல்லப்படுகிறது

உண்மையில் இந்த கருத்துக்கள் கூட ஆதி கால யூத மதத்திற்கு தோற்றுவாயாக இருந்த சொராஷ்திரிய மதத்தின் மைய கருத்தே ஆகும்
இன்னும் ஆழமாக பல விஷயங்களை எடுத்து அலசினால் இஸ்லாம் என்ற கட்டிடம் முகமது நபியின் தனி சிந்தனையில் உருவானது அல்ல

இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும்

இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம்

காரணம் இத்தகைய நிஜங்கள் அவர்கள் நம்பிக்கையே குறைப்பதாகவே எடுத்துக் கொள்வார்களே தவிர ஒத்து கொள்ள மாட்டார்கள்

இஸ்லாத்தின் அடி நாதமான மத விஷயங்கள் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பே ஆகும்

மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு அதுவும் வாழ்வியலுக்கானது அல்ல அக்கால அரசியல் காரணங்களுக்கானதே ஆகும்.

உஜிலாதேவி இணையம்
Share |

Show commentsOpen link

Monday, October 7, 2013

தூத்துக்குடி--வரலாறு Toothukkudi History - Tuticorin History

 தூத்துக்குடி--வரலாறு Toothukkudi History - Tuticorin History


தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின்,

Wednesday, October 2, 2013

கருணை உள்ளமே,காக்கி வடிவமே karunai ullam

கருணை உள்ளமே,காக்கி வடிவமே
...
by Marikumar

கோவையில் உள்ள அந்த மயானத்தில் ஒரு பிணம் புதைக்கப்படுகிறது, அந்த பிணத்தை புதைக்கும் தொழில் செய்யும் வெட்டியானை தவிர அந்த பிணத்தின் அருகில் இருந்தது ஒரே ஓருவர்தான், அவரும் உறவினரோ, நண்பரோ அல்ல. ஆனால் உறவினக்கும், நண்பருக்கும் மேலான சிரத்தை எடுத்து எல்லா "காரியங்களையும்' செய்துவிட்டு கிளம்புகிறார்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை முந்நூறுக்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களுக்கு , ஆதரவாளனாக இருந்து கடைசிகால காரியங்களை செய்து வருகிறார்.

அவரது பெயர் சபரிராஜ்

தற்போது கோவை போத்தானூரில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வருகிறார்.
இவரது வேலை காரணமாக பல்வேறு ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 28 வருடங்களாக காவலராகவும், தலைமைக் காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களையும், அடிபட்டு இறப்பவர்களையும் உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும், ஆனால் இறந்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் கேட்பாரற்று இருப்பார்கள். இதன் காரணமாக இவர்களை நல்லடக்கம் செய்யவேண்டிய பொறுப்பு போலீசார் தலையிலே விழும்.

இதற்கான செலவு மற்றும் சிரமத்தை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காத சூழ்நிலையில், நிலையத்தில் உள்ள காவலர்கள் நொந்து கொண்டே இந்த காரியங்களை செய்வார்கள். அதுவும் மயானத்தில் எல்லாம் முடிந்து அடக்கம் செய்யும் போது அடையாளம் காண்பதற்காக எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுதான் ரயிலில் அடிபட்டு இறந்த பிணங்களை அடக்கம் செய்வதற்கான பொதுவான நடைமுறை.

ஒரு முறை இந்த பொறுப்பு சபரிராஜுவிடம் வந்தபோது, பாவம் இந்த உடலும் ஒரு உயிரைச் சுமந்திருந்த ஆத்மாதானே, அதற்கான மரியாதை தரவேண்டாமா? என யோசித்தவர், தானே இறந்த பிணத்தின் உறவாக மாறி எல்லா சிரமங்களையும், செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அந்திம காரியங்களை செய்தார். அப்போது அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி ஏற்பட்டது.

அதன்பிறகு இதே போல அடுத்தடுத்து பிணங்களுக்கும் இவரது மரியாதை தொடர்ந்தது, வேறு ஏதாவது ரயில் நிலையத்திலோ அல்லது வேறு ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது இந்த நிலை ஏற்பட்டாலும், "சபரிராஜிடம் சொல்லிவிடு அவர் இதை சரியாக செய்வார்' என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணிக்கைதான் இப்போது முன்னூறை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது.

இது இவரது ஒரு பக்கம் என்றால் இன்னோரு பக்கம் தேர்வுக்கு பயந்து, சினிமா மோகம் ஏற்பட்டு ரயிலேறி வரும் சிறுவர்கள், இளம் பெண்கள் பலரை சரியான அறிவுரை சொல்லி திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் செய்துவருகிறார். மேலும் வழிதவறி ரயிலில் வந்துவிடும் வயதானவர்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது இன்னொரு வேலையாகி விட்டது.

ஆனால் இதையெல்லாம் வேலையாகச் செய்வது இல்லை நமக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பு என்று விரும்பி செய்வார். கடந்த வாரம் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவர் இவரிடம் வந்து சேர்ந்தார். பெயர் அருக்காணி என்று மட்டும் சொல்லத் தெரிந்தது. இவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒரு வாரமாக பொறுமையாக அலைந்து திரிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த ஒரு வார காலத்திற்குள் தாய்-மகன் பாசம் ஏற்பட்டுவிட, அருக்காணி உறவினர்களிடம் போக மறுத்து, " உன்கூடவே இருந்துடேறேன்ம்பா'' என்று சபரிராஜின் கையை பிடித்து கெஞ்சியபோது இருவரின் கண்களிலும் கண்ணீர்.

காக்கி சட்டையை அணியும் போது கருணையை கழட்டி வைத்து விடும் காவலர்கள் மத்தியில் ,காக்கி சட்டையுடனும் கருணையையும் சேர்த்து அணிந்து கொண்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் சபரிராஜ் உடன் பேசுவதற்கான எண்: 9843258339.

- எல்.முருகராஜ்
Share |

Show commentsOpen link

Tuesday, October 1, 2013

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா: மலேசியாவில் 3 நாட்கள் நடக்கிறது 3 rd world war by vairamuthu

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா: மலேசியாவில் 3 நாட்கள் நடக்கிறது

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா, மலேசியா நாட்டில் 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. புவி வெப்பமயமாதல், உலகமயமாதல், இந்திய விவசாயிகளின் துயரம் என்ற பிரச்சினைகளை மையப்படுத்தி, கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகம், ஒரே ஆண்டுக்குள் 11 பதிப்புகள் வெளிவந்துள்ளன.

விவசாயம் பொய்த்துப்போனதால் குடும்பத்தலைவனை இழந்த 11 தமிழக விவசாய குடும்பங்களுக்கு இந்த நாவல் மூலம் கிடைத்த வருமானத்தில் 11 லட்சம் ரூபாயை, கவிஞர் வைரமுத்து ஏற்கனவே வழங்கி இருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலின் அறிமுக விழாக்கள் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடந்துள்ளன. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து:, நெதர்லாந்து, சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளிலும் நடந்துள்ளன.

மூன்றாம் உலகப்போர் 11-வது பதிப்பின் அறிமுக விழாக்கள், மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் வருகிற 4-ந்தேதியும், சிரம்பான் நகரில் 5-ந்தேதியும், பினாங்கு நகரில் 6-ந்தேதியும் நடக்கின்றன.

கோலாலம்பூர் விழாவில் மலேசிய முன்னாள் மந்திரி டத்தோ சாமிவேலு கலந்துகொள்கிறார். சிரம்பான் விழாவில் டத்தோ சகாதேவனும் கலந்துகொள்கிறார்கள். இந்த இரு விழாக்களையும் மலேசியா இந்தியா வர்த்தக சபை மற்றும் நெகிரி செம்பிலான் இந்திய சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் சார்பில் டத்தோ கனகராஜாராமன், டாக்டர் வீரப்பன், கன்னியப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.

பினாங்கில் நடைபெறும் விழா, மலேசியா இளைஞர் விளையாட்டுத்துறை துணை மந்திரி டத்தோ எம்.சரவணன் தலைமையில் நடக்கிறது. கண்ணதாசன் அறவாரியமும், பினாங்கு முத்தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்துகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பேசுகிறார்கள். மூன்று விழாக்களிலும் கவிஞர் வைரமுத்து கலந்துகொள்கிறார். இதற்காக, நாளை (புதன்கிழமை) கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார். 7-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்.

The post கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அறிமுக விழா: மலேசியாவில் 3 நாட்கள் நடக்கிறது appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Popular Posts