Friday, September 27, 2013

தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! World tamil names

தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! …..தமிழன்…. டா…!

by admin
ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள் ..
.Today,

Doctor — வைத்தியநாதன்
Dentist — பல்லவன்
Lawyer — கேசவன்
Financier — தனசேகரன்
Cardiologist — இருதயராஜ்
Pediatrist — குழந்தைசாமி
Psychiatrist — மனோ
Sex Therapist — காமதேவன்
Marriage Counselor — கல்யாண
சுந்தரம்
Ophthalmologist–கண்ணாயிரம்
ENT Specialist — நீலகண்டன்
Diabetologist — சக்கரபாணி
Nutritionist — ஆரோக்கியசாமி
Hypnotist — சொக்கலிங்கம்
Exorcist — மாத்ருபூதம்
Magician — மாயாண்டி
Builder — செங்கல்வராயன்
Painter — சித்திரகுப்தன்
Meteorologist — கார்மேகம்
Agriculturist — பச்சைப்பன்
Horticulturist — புஷ்பவனம்
Landscaper — பூமிநாதன்
Barber — சவுரிராஜன்
Beggar — பிச்சை
Alcoholic — மதுசூதனன்
Exhibitionist — அம்பலவானன்
Fiction writer — நாவலன்
Makeup Man — சிங்காரம்
Milk Man — பால் ராஜ்
Dairy Farmer — பசுபதி
Dog Groomer — நாயகன்
Snake Charmer — நாகராஜன்
Mountain Climber — ஏழுமலை
Javelin Thrower — வேலாயுதம்
Polevaulter — தாண்டவராயன்
Weight Lifter — பலராமன்
Sumo Wrestler — குண்டு ராவ்
Karate Expert — கைலாசம்
Kick Boxer — எத்திராஜ்
Bowler — பாலாஜி
Spin Bowler — திருப்பதி
Female Spin Bowler — திரிப்புரசுந்தரி
Driver — சாரதி
Attentive Driver — பார்த்த சாரதி..

The post தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! …..தமிழன்…. டா…! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Thursday, September 26, 2013

Suicide is wrong - தற்கொலை தவறு..!

Suicide is wrong - தற்கொலை தவறு..!
by selvipandiyan

தற்கொலை தவறு..!

தற்கொலை என்பது ஒரு விபரீத செயல்.
தற்கொலை செய்து கொண்ட ஜீவன்கள், சரீரமில்லாமல், பசியாலும், தாகத்தாலும், மன நிம்மதியின்றி ஒவ்வொரு வினாடியும் துடிதுடித்து துன்புருவதைபற்றி நமது புராதன நூல்கள் விவரிக்கின்றன..

தற்கொலை செய்து கொண்ட ஜீவன் படும் கொடிய அனுபவத்தை " கயா ஷேத்திர வரலாறு " விவரித்து இருக்கிறது..



Show commentsOpen link

சிவாவுக்கும், சந்தானத்துக்கும் ஏழாம் பொருத்தம் siva and santhanam

Siva and santhanam
சிவாவுக்கும், சந்தானத்துக்கும் ஏழாம் பொருத்தம்

சந்தானம், சிவகார்த்திகேயன் இருவருமே விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். ஆனால், ஏனோ சிவாவுக்கும், சந்தானத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.

'யா யா' படத்தில் 'மிர்ச்சி' சிவா வேடத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேசி அட்வான்ஸும் கொடுத்து விட்டார்களாம். 'அவன் நடிச்சா... நான் நடிக்க மாட்டேன்' என்று சந்தானம் கண்டிஷன் போட்டதால், சிவகார்த்திகேயனைத் தூக்கிவிட்டு 'மிர்ச்சி' சிவாவை நடிக்க வைத்தனர்.

அடுத்து 'ராஜா ராணி' படத்திலும் ஜெய் நடிக்கும் கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அவரிடம் பேச்சு வார்த்தையும் நடபெற்று வந்தது. அங்கேயும் சந்தானம் புகுந்து சலம்பல் செய்ததால் சிவாகார்த்திகேயனை நீக்கிவிட்டு ஜெய்யை நடிக்க வைத்தனர்.

'ரெண்டு பேரும் காமெடியன்கள் தான். ஆனா, அவனுக்கு மட்டும் ஹீரோ சான்ஸா குவியுதே...' என்ற விரக்தியில் தான் சந்தானம் இப்படிப் பண்ணுகிறார் என்கிறார்கள்.

இதனால் சந்தானம் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். பிரச்னை எப்போது வெடிக்கப்போகிறது என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் இருவராலும் வாய்ப்பின்றித் தவிக்கும் சில காமெடியன்கள்.

Show commentsOpen link

Friday, September 20, 2013

Annadurai - அண்ணாதுரை

Annadurai - அண்ணாதுரை

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,

அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம் :
என் தந்தை அண்ணாதுரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அப்பாவை, சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பலாம் என, என் தந்தையுடன், நானும், என் அம்மா ராணியும் போக முடிவெடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தனர்.
"அண்ணாதுரையுடன் செல்வதற்கு அவருடைய மனைவி அல்லது மகன் இருவரில், யாராவது ஒருவருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்க முடியும்...' என்று, அன்றைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் மறுத்து விட்டார்.

இதை, எப்படி அண்ணாதுரையிடம் சொல்வது என்று, கருணாநிதிக்கு தயக்கம். அவர் என்னை அழைத்து, "இது சென்சிடிவ் பிரச்னை. நீ அல்லது அண்ணி மட்டும் தான் செல்ல வேண்டும்...' என்று, சொல்லி விட்டு, "நீ தான் அண்ணா துரையிடம், "அண்ணியை மட்டும் அழைத்துச் செல்லுங்கள். நான், இரண்டொரு நாள் கழித்து, எப்படியா வது அங்கு வந்து சேர்ந்து கொள் கிறேன்' என்று சொல்லி, அண்ணா துரையை சம்மதிக்க வைக்க வேண்டும்...' என்று சொன்னார்.

நான் அப்பாவிடம் சென்று, மெல்ல இந்தப் பிரச்னையை எடுத்துச் சொன்னேன். அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார். அதிலே, ஆயிரமாயிரம் பொருள். என்னால், அந்தப் பார்வையை சமாளிக்க முடியவில்லை. "அப்பா, உங்களுடன் அம்மா வரட்டும். நான், கொஞ்ச நாள் கழித்து, அங்கே வந்து சேர்ந்து கொள்கிறேன்...' என்றேன்.

அதற்கு அப்பா சொன்ன பதில், எனக்கு வியப்பை அளித்தது. "ராணிக்கு ஒன்றும் தெரியாது. அது வந்து, என்ன செய்யப் போகிறது... நீ வா...' என்றார்.

நான் அதிர்ந்து, விக்கித்தேன். "நீ வா' என்கிறாரே... என்ன ஒரு பாசம். உலகத்தில், எங்கேயாவது தான் பெறாத ஒரு பிள்ளையிடம், இப்படியொரு பாசத்தை பொழியும் ஒரு மனிதர் இருப்பாரா...' என்று, எண்ணி நெகிழ்ந்தேன்.

அதன் பின், ராஜாராம், செழியன் ஆகியோர் நேராக டில்லிக்கு சென்று, பிரதமர் இந்திராவை சந்தித்து, நிலைமையை விளக்கி, அவர் தலையிட்டு, சட்ட விலக்களித்து, "இருவரும் அண்ணாதுரையுடன் செல்லலாம்...' என்று, அனுமதி பெற்றுத் தந்தார்.

— "அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்.

***




கடந்த, 1952ம் ஆண்டு பொதுத் தேர்தல். அன்று இரவு 10:00 மணிக்கு, ஒரு பொதுக் கூட்டத்திற்கு பேச வந்திருந்தார் அண்ணாதுரை. காலை, மதியம், மாலை என, மூன்று கூட்டங்களில் பேசி, களைத்துப் போயிருந்தார். எனவே, இரவு நடந்த கூட்டத்தில், மேடையில் ஏறியதும், தன்னுடன் வந்திருந்த ஒரு சில முக்கியஸ்தர்களிடம், "சற்று நேரம், நீங்கள் உரையாற்றுங்கள். அது வரை நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன்...' என்றபடி, மேடை இருக்கையில் அமர்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், பேச எழுந்த ஒரு சிலரும், கூட்டத்தினரைப் பார்த்து, "நீங்கள் எல்லாரும், அண்ணாதுரை பேசப் போவதை, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, இத்துடன் விடை பெறு கிறேன்...' என்று, ஓரிரு நிமிடங் களில் உரையை முடித்துக் கொண் டனர்.

பாவம் அண்ணாதுரை. எழுந்து மைக் முன்னே வந்து, "தோழர் களே! காலை முதல், பல கூட்டங்களில் பேசி, களைத்துப் போயிருக் கிறேன், உடல் சோர்வால்! நிற்கவும் முடிய வில்லை; கால் வலி வேறு. தோழர்கள் பேசும் வரை ஓய்வு பெறலாம்; புது வலிவு பெறலாம் என்ற எண்ணத்தில், நண்பர்களைப் பேசும்படி கூறினேன். அவர்களெல்லாம், தெருக் கூத்திலே வருகிறானே கட்டியக்காரன், அவனைப் போல, "வந்தனம், தந்தனம் சபையோர்களே! சிறு மைந்தனை ஆதரிப்பீர்களே!' எனப்பாடி, இரண்டொரு, "கிர்கி' அடித்து வணக்கம் தெரிவித்து விட்டு, "அதோ... பின்னாலே துடி வேஷக்கார துரியோதன மகராசன் வருகிறார்...' எனக் கூறி, திரைமறைவிற்கு ஆடிப் போவதைப் போல, எல்லாரும், "அண்ணாதுரை பேசுவார்; அண்ணாதுரை பேசுவார்' என்று கூறிவிட்டு, உட்கார்ந்து விட்டனர். கட்டியக்காரன் அறிவிப்பைக் கேட்டு, துடி வேஷக்கார துரியோதன மகராசன், பரி வேடத்துடன் வந்து ஆட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதை போல நானும், பாதி ஓய்வுடன் வந்து, பேச வேண்டி யதாகி விட்டது...' என்றார்.

***




நடுத்தெரு நாராயணன்

Show commentsOpen link

Kannadasan - கண்ணதாசன்

Kannadasan - கண்ணதாசன்

by tnkesaven
New Tamil Jokes - comToday,
கண்ணதாசன்

நல்ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறைய உண்டு. இருந்தும் என்ன செய்ய... "செக்சை அப்படியே பிழிந்து கொடு...' என்று தான் எல்லா தயாரிப்பாளர்களும் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

ஒரு முறை மேல் கச்சையும், ஜட்டியும் மட்டுமே அணிந்த ஒரு பெண்ணை, என் முன் நிறுத்தி, "ம்... எழுது பாட்டை...' என்று கூறினர். எனக்கோ எரிச்சல்... அந்தப் பெண்ணை பார்க்க சகிக்கவில்லை. இந்த லட்சணத்தில் எங்கிருந்து பாட்டெழுத...

"ஆண்டவன் படைத்த உடம்பு தானே... ஆடை என்ன அவசியமா...' என்று, எழுதி விட்டேன்.

"இப்படி எழுதிட்டீர்களே சென்சார் அனுமதிக்குமா' என்று, தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். "உங்கள் படத்தை அனுமதிக்கிற சென்சார், என் பாட்டையும் நிச்சயம் அனுமதிக்கும்...' என்று சொல்லி அனுப்பினேன்...

— இப்படி பேசினாராம் கவிஞர்.

இப்போ வரும் பாட்டுகளைக் கேட்டால், என்ன சொல்லியிருப்பாரோ கவிஞர்!
dinamalar

Show commentsOpen link

Wednesday, September 18, 2013

இணையற்ற தமிழன் திரு கல்யாண சுந்தரம் kalyana sundaram

 Kalyana Sundaram
இந்த நூற்றாண்டின் இணையற்ற ஒரு தமிழன்

35 ஆண்டு காலம் நூலகராக அரசு பணியாற்றி தன சம்பளம் முழுதும் அநாதை குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தன தேவைகளுக்காக மாலை நேரங்களில் ஒரு உணவு விடுதியில் பணியாற்றிய மாபெரும் மனித நேயர் திரு கல்யாண சுந்தரம்

அரசு ஒய்வு ஊதியமாக கிடைத்த பத்து லட்சம் ரூபாவையும் ஏழைகளுக்கு வழங்கிய மாமனிதன்

தன் இறப்புக்கு பின் உடல் மற்றும் கண்களை திருநெல்வேலி மருத்துவகல்லூரிக்கு தானம் செய்ய முன்வந்த மனிதர்

உலகிலேயே தான் வாழ்நாள் வருமானம் முழுதும் தானமாக வழங்கிய ஒரே மனிதன் என்ற பேரு பற்றவர்

இந்திய அரசின் சிறந்த நூலகர் பரிசு பெற்றவர் (also been chosen as `one of the top ten librarians of the world'. - )

Tuesday, September 17, 2013

தந்தை பெரியார் பிறந்த தினம் thanthai periyar birthday

செப்.17: தந்தை பெரியார் பிறந்த தினம்

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,

செப்.17: தந்தை பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.இராமசாமி பிறந்த தினம் இன்று.. (1879)

சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது




vikatan/fb

Show commentsOpen link

Friday, September 13, 2013

அடுத்த நுற்றாண்டில் தமிழ் இனம் - Tamilan

ஆரியன் வந்தான்
சாத்திரத்தையும் சாதியையும்
விதைத்தான்..!

மொகலாயன் வந்தான்
மதத்தையும் மதத்தால்
அழிவையும் விதைத்தான்..!

ஆங்கிலயன் வந்தான்
சுரண்டலையும் அதனால்
பசியையும் வறுமையும்
விதைத்தான்..!

ஏமார்ந்த தமிழன்
எல்லாவற்றையும்
ஏற்று கொண்டான்..!

தன்னை தானே
இழித்து கொள்ளும்
தரங்கெட்ட நிலைக்கு
தாழ்ந்தும் போனான்..!

கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..!

ஈழம் சென்று
கங்கை கொண்டு
கடாரம் வென்று
இமயத்தில்
கொடி நாட்டியவன்..!

இன்று
இனம் பிரிந்து
மொழி மறந்து
அகதிகளாய்
முகம் தொலைத்து
முகவரியற்று அலைகிறான்..!

இன்று
அங்கவையும் சங்கவையும்
கேலிபொருள்கள்
கோப்பெருந்தேவியும்
குழல்வாய்மொழியும்
விலைமாதர்கள்..!

தமிழ்
பேசினால் பாவம்
தமிழ்
படித்தால் சாபம்..!

தம்
இனம் மறந்து
மொழி தொலைந்து
திரியும் இவன்
அடுத்த நுற்றாண்டில்
அழிந்து போவான் ..!

ஒரு இனத்தின்
அடையாளமே
அதன் மொழியே;
மொழி அழிந்தால்
நிச்சயம் அந்த இனம் அழியும்..!

- அ. எழில் அரசி.

Wednesday, September 11, 2013

சுப்பிரமணிய பாரதி நினைவுதினம் இன்று (11-09-1921)

தமிழால் இணைவோம்:
சுப்பிரமணிய பாரதி
நினைவுதினம் இன்று
(11-09-1921)

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன் முகம் கொண்டவர் பாரதியார்.

பாரதியின் எழுத்துக்கள் நம் நாட்டு விடுதலைக்கு வித்திட்டது. நவீன கவிதைகளுக்கு வித்திட்ட கவிஞன் பாரதி.

பாரதியின் இயற்பெயர் சுப்பையா (எ) சுப்பிரமணியம். சுப்ரமணிய பாரதியின் கவித்திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்க மன்னார் அவரின் அரசவையில் வழங்கப்பட்டது.

1912ல் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார் பாரதி. இந்தியா என்ற பத்திரிகையில் தன் போராட்சி எழுத்துக்களை விதைத்து பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

தன் கவிப்புலமையால் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தவன் பாரதி.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.

பாரதியின் உயிர் உலகில் இருந்து விடை பெற்றிருந்தாலும் அவரின் கவிதைகளும், விடுதலைக்காக அவர் எழுதிய வாசகங்களும், அவரின் புகழும் மறையாமல் நெஞ்சில் நிற்கிறது.

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி.

இந்த கவிதைக்கு சிறந்த உதாரணம் பாரதியை தவிர வேறு யாராக இருக்க முடியும்.

பாரதியின் உடலுக்குத்தான் விடைகொடுத்தோம் அன்று.. வாழும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் பாரதியின் உணர்வுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

#நந்தமீனாள்
மதுரை.

தமிழால்

Sunday, September 8, 2013

கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்கள் black money top 13 india

ஏழை எளிய மக்களின்
பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ்
வங்கியிலே கருப்பு பணமாக
வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின்
பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ்
வெளியிட்டு உள்ளது

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி

அர்சத்மேதா.................1,35,800 கோடி

லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி

ராஜீவ் காந்தி..................19,800 கோடி

கருணாநிதி....................35,000 கோடி

சிதம்பரம்.......................32,000 கோடி

சரத் பவார்.....................28,000 கோடி

கலாநிதி மாறன்...............15,000 கோடி

HD குமாரசாமி................14,500 கோடி

JM சிந்தியா......................9,000 கோடி

கேடன் பிரகாஷ்..................8,200 கோடி

A ராஜா...........................7,800 கோடி

சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி

தயவு செய்து வாசகர்களும்,
விமர்சகர்களும் தங்களின்
கருத்துக்களை பதிவு செய்ய
வேண்டுகிறேன்....சக்தி

Friday, September 6, 2013

குமரிக்கண்டம் kumarikandam or naavalan theevu

இனிமேல் நாம் 2000 வருடம்
பழமையானவர்கள் என்ற
பழங்கதையை விட்டு விட்டு 20,000
வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம்
என்று பெருமையுடன்
கூறுவோம்.வரலாற்று தேடல்
தொடரும்.........!!
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர
தொடங்கியுள்ளது .
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த
முறை உங்களை 20,000
வருடங்களுக்கு முந்தைய கடலில்
மூழ்கிய
ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவ
ிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க
உங்களின் பொன்னான 5
நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான்
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம்
மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம்
இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ்
பிறந்தது.இங்கு தான் இன்னும் பல
வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
ஆம் இது தான்"நாவலன்
தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.
கடலுக்கடியில் இன்று அமைதியாக
உறங்கிக்கிகொண்டிருக்கும்
இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ்
கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க,
இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு,
சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த
ஒரு பிரம்மாண்டமான இடம்
தான்"குமரிக்கண்டம்".
ஏழுதெங்க
நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை
நாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற
நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்ப
னை நாடு என
இங்கு நாற்பது ஒன்பது நாடுகள்
இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற
இரண்டு ஆறுகள்
ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,
மணிமலை என இரண்டு மலைகள்
இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடப
ுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான
மூன்று நகரங்கள் இருந்தன.உலகின்
தொன்மையான நாகரீகம்
என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம்
வெறும் நான்காயிரம் வருடங்கள்
முந்தையது தான். நக்கீரர்"இறையனார்
அகப்பொருள்"என்ற நூலில்
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள்
தொடர்து நடைபெற்றதாக
கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம்
இந்த கடலடியில் உள்ள"தென்
மதுரையில்"கி.மு 4440இல்
4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர்,
அகஸ்தியருடன் 39மன்னர்களும்
இணைந்து,"பரிபாடல்,
முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிர
ை, பேரதிகாரம்"ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .இதில்
அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டா
தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில்
கி.மு 3700இல் 3700புலவர்கள்கள
ுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,ப
ூதபுராணம்,மாபுராணம்"ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .
இதில்"தொல்காப்பியம்
மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.ம
ூன்றாம் தமிழ்ச் சங்கம்
இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல்
449 புலவர்கள்களுடன்"அகநானூறு,
புறநானூறு,நாலடியார்,
திருக்குறள்"ஆகிய நூல்கள்
இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான
தமிழனின் வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய
இந்திய அரசு எந்த அக்கறையும்
காட்டாமல் இருப்பது வேதனையான
விஷயம் !!!!..இந்திய
அரசு வெளிக்கொண்டுவராத நம்
வரலாற்றை நாமே இந்த
உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம்
2000 வருடம் பழமையானவர்கள் என்ற
பழங்கதையை விட்டு விட்டு 20,000
வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம்
என்று பெருமையுடன்
கூறுவோம்.வரலாற்று தேடல்
தொடரும்.........!!
தமிழ் மொழி என்றும் வாழிய
வாழியவே !
இது போன்ற தகவல்களைப்
பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம்
வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப்
படித்துவிட்டு நண்பர்களுடன்
உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட
நண்பர்களில் குறைந்தப்பட்சம்
ஐம்பது பேராவது இதனைப்
பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன்
எல்லாமே
இதனைக் கண்டிப்பாகப்
பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .
நன்றி

Tuesday, September 3, 2013

பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர்
லண்டன்
மாநகருக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவரது நண்பர் ஒருவரின்
பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப்
பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில்,
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில்
இருந்தது.
அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை,
பண்ணை மைதானத்தில்
விவேகானந்தர் வாக்கிங்
சென்று கொண்டிருந்தார். அவருடன்
நண்பரும்,
நண்பரின் மனைவியும்
நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது—
சற்றும் எதிர்பாராதவிதமாக
ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப்
பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான
ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன
நண்பரின்
மனைவி,
அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
அதைக் கண்டதும் விவேகானந்தரும்,
அவரது நண்பரும் துணுக்குற்றனர்.
மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார்.
அப்போது மாடு அவர்களை நெருங்கி வி
நண்பருக்குக் கையும் ஓடவில்லை;
காலும்
ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால்
மாட்டின் கொம்புகளுக்கு இரையாக
நேரிடும்
என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ள
எழுந்து வேறு திசையில்
ஓடினார். ஆனால், விவேகானந்தர்
அப்படி இப்படி அசையாமல்
ஆணி அடித்தது போல் அந்த
இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு,
கீழே விழுந்து கிடந்த
நண்பரின் மனைவியையும்
விவேகானந்தரையும் விட்டு விட்டு,
ஓடிக்
கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.
அதைக் கண்ட நண்பர் பின்னங்கால்
பிடறியில்
அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு ஓடினார். மாடும் விடாமல்
அவரைத்
துரத்தியது.
அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள்
புகுந்து தப்பினார் நண்பர். அதன்
பிறகே பண்ணை ஊழியர்கள்
ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்
போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த
இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம்.
அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம்
தெளிந்து எழுந்தார்.
""சிறிது கூட பயமே இல்லாமல் அந்த
ஆபத்தான
நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக
உங்களால் எப்படி நிற்க முடிந்தது?''
என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த
விவேகானந்தர், ""நான் வித்தியாசமாக
எதையும்
செய்து விடவில்லை.
வருவது வரட்டும்;
சமாளிப்போம் என்ற ஒருவித மன
உறுதியுடன்
நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால்
துரத்திச்
செல்வது மிருகங்களுக்கு உரிய
குணம். அதனால்தான்
மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக்
கொண்டிருக்கும் உங்களைத்
துரத்தியது,''
என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட,
அதைக்
கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும்
என்ற
மன உறுதி பெற்றிருந்த
சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப்
பெரிதும்
வியந்தார் நண்பர்.

Popular Posts