Friday, August 23, 2013

டாக்டர் மதிவாணன்

தமிழால் இணைவோம்: இப்பவெல்லாம் நாலுபேரைத் திட்டுறது அல்லது கொல்லுறது தான் புரட்சி என்றளவுக்கு கருத்தியல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புரட்சி என்றால் மாற்றம். மக்கள் வாழ்வில் ஒளிமயம் ஏற்படுத்தக்கூடிய எல்லா மாற்றங்கள்/ கண்டுபிடிப்புக்கள்/ அறச்செயல்கள் எல்லாமே புரட்சிதான். ஆரவாரமில்லாமல் அமைதியாக எத்தனையோ புரட்சிகளை நாம் செய்யலாம். 10-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் நான் பார்த்த ஒரு புத்தாக்கச் செயல் வீரர். இவர் பெயர் டாக்டர் மதிவாணன். இவர் அடிப்படையில் கால்நடை மருத்துவர். ஆனால் தற்போது இவர் சாதனை செய்திருப்பது தையற்கருவியில் என்றால் வியப்பூட்டுகிறது. "மின்தமிழில் தையல்" என்பதற்கொப்ப சிறப்பாக தயாரிக்கப்பட்ட தையற்கருவியில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்து, முதன் முறையாக துணியில் தைக்கும்போதே தமிழ் எழுத்துக்கள் வெளிப்படும் வண்ணம் மலேசியாவில் சாதனை படைத்து வருகிறார். டாக்டர் மதிவாணன், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல செயல்முறை ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தத் தையற்கலை துறையில் தானியங்கிக் கருவிவழி தமிழ் தைக்க பெரும் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளார். இந்த மலேசியத் தமிழரின் சாதனையை எண்ணி வியப்பதோடு மட்டுமல்லாமல், மனதார வாழ்த்தவும் செய்கிறோம்.

வழி: Vasudevan Letchumanan

No comments:

Post a Comment

Popular Posts