தமிழால் இணைவோம்:
தமிழர்கள் பெரும்பாலும் எல்லா துறைகளிலும் முன்னோடியாகவும், முடிந்த வரை தாங்கள் பயன்படுத்தும் சொற்களை கூட நேர்மறை எண்ணங்கள் (positive thinking) கொண்டதாக இருக்க வேண்டும் என்றே நினைத்தனர், அப்படி அவர்கள் உருவாகிச் சென்ற மொழி தான் நம் தமிழ். உதாரணத்திற்கு மேலிருந்து கொட்டும் நீரைக் கூட அவர்கள் எதிர் மறையாக "நீர் வீழ்ச்சி" என்று அழைக்காமல் "அருவி" என்றே அழைத்தனர், ஆனால் தற்போது நாம் வெள்ளைகாரர்கள் கொடுத்துச் சென்ற "WATER FALLS" என்ற வார்த்தையை தமிழாக்கம் செய்து அதை "நீர் வீழ்ச்சி" என்ற எதிர் மறை சொல்லை கொண்டே அழைக்கிறோம். இது போன்று எவ்வளவோ நல்ல தமிழ்ச் சொற்களை நம்மை அறியாமல் நாம் தினமும் இழந்து வருகிறோம்.முடிந்த வரை நம் பழைய தமிழ்ச் சொற்களை பேச்சிலும்,எழுத்திலும் கொண்டு வர முயற்சிப்போம். வாழ்கையில் நேர்மறையான எண்ணங்கள் தானாய் வரும்.
@சுந்தர் ராமன்
Visit our Page -► தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment